வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: ஜெருசலேமில் உள்ள மத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர்.
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் நகரில் பிரசித்தி பெற்ற மதவழிபாட்டு தலம் உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமானோர் கூடினர். அப்போது இளைஞன் ஒருவன் சாரமாரியாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 7 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.
இந்த தாக்குதலை 'பயங்கரவாத செயல் என இஸ்ரேல் போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் வசித்த பாலஸ்தீனியர் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அது நிரூபிக்கப்படவில்லை.