இலவச வேட்டி - சேலை: அரசுக்கு பன்னீர் கண்டனம்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி - சேலையை வழங்கவில்லை என, அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழியே, இலவசமாக வேட்டி - சேலை வழங்கப்பட்டது. இந்தாண்டு இலவச வேட்டி - சேலை வழங்க, 500

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி - சேலையை வழங்கவில்லை என, அரசுக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை:இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழியே, இலவசமாக வேட்டி - சேலை வழங்கப்பட்டது. இந்தாண்டு இலவச வேட்டி - சேலை வழங்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பத்து வடிவமைப்புகளில் சேலை; ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வினியோகிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வந்தன. இன்று பொங்கல் பண்டிகை முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும், இலவச வேட்டி, சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கண்டனத்துக்கு உரியது.


latest tamil news



பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி - சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகம், மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.

எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலைகளை, ரேஷன் கடைகள் வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும்காலங்களில், பொங்கல் பண்டிகைக்கு முன், வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

29-ஜன-202305:31:23 IST Report Abuse
அப்புசாமி சல்லாத்துணி மாதிரி ஒரு வேட்டி, அதுக்கே கலர் அடிச்சு ஒரு புடவை.இதுக்கு போய் ஜனங்க அடிச்சுங்கறாங்க. இதை வெச்சு பழைய சாதம்வடிகட்டலாம்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
28-ஜன-202313:04:24 IST Report Abuse
R.RAMACHANDRAN ஏழைகளுக்கு மட்டும் வழங்குவதாக இருந்தால் எப்போதோ வழங்கி இருக்கலாம்.வாக்கு வங்கிக்காக அனைவருக்கும் வழங்குவதால் இந்த ஆண்டு இதுவரை வழங்கவில்லை.அரசியல் வாதிகள் பணக்காரர்களுக்கு வழங்கி அவர்கள் அதனை விற்க ஏழைகளுக்காக போராடுவதாக முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
28-ஜன-202310:55:47 IST Report Abuse
R. Vidya Sagar இலவசம் . . . . .இலவசம் . . . . இலவசம் . . . . .இலவசம் . . . ....தமிழனை உழைக்க விட்டு விடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X