பிபிசி ஆவணப் படம் திரையிட முயற்சி: டில்லி பல்கலை மாணவர்கள் 24 பேர் கைது

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: டில்லி பல்கலையில் பிபிசி ஆவணப் படம் திரையிட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர் . குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து, பி.பி.சி., தொலைக்காட்சி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால், அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, மத்திய அரசு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: டில்லி பல்கலையில் பிபிசி ஆவணப் படம் திரையிட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர் .



latest tamil news


குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து, பி.பி.சி., தொலைக்காட்சி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால், அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணப்படம், பல இடங்களில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் டில்லி பல்கலையில் சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப் படம் திரையிட முயற்சி செய்ததால் 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு பல்கலை மற்றும் ஜாமியா பல்கலைமாணவர்களும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிரச்னை ஏற்படாத வகையில் டில்லி பல்கலை வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், சென்னை பல்கலையில், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிட, மாணவர்கள் திட்டமிட்டனர்.

அந்த படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட, துணைவேந்தர் கவுரி தடை விதித்தார். இதையடுத்து நேற்று, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால், பல்கலையின் தடையை மீறி, இந்திய மாணவர் சங்க மாநில செயலர் நிருபன் தலைமையிலான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை வழியாக, ஆவணப்படத்தை மாணவர்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (32)

Mohan - Salem,இந்தியா
29-ஜன-202316:55:15 IST Report Abuse
Mohan கேவலமான செயல்களில் ஈடுபடும் BBC ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த ஊடகம் அல்ல. இவர்கள் உண்மையில் நேர்மையான ஊடகம் அல்ல
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
28-ஜன-202320:56:50 IST Report Abuse
MARUTHU PANDIAR இத்தாலி காரனின் thiruttuth
Rate this:
Cancel
RAMESH - chennai,இந்தியா
28-ஜன-202320:33:53 IST Report Abuse
RAMESH பிபிசி நாடு முழுக்க தடை செய்யப்படவேண்டும் . அதோட சேர்த்து suntv யையும் தடை செய்யணும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X