திண்டுக்கல்: குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா , சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு விடப்பட்டுள்ளதா என திண்டுக்கல் தொழிலாளர் அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சிவசிந்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல் பகுதி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். கடைகள் 30 ,உணவு நிறுவனங்கள் 34 என 64 நிறுவனங்களில் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.