மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு புதுமணத்தம்பதியின் பாரம்பரிய பயணம்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மேலுார்: மதுரை மாவட்டம் கீழையூரில் முன்னோர் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட புதுமண தம்பதியர், திருமணம் முடிந்ததும் மாட்டு வண்டி பயணம் செய்து, நெல்மணி, ஜல்லிக்கட்டு காளையை வணங்கினர்.வசதி, வாய்ப்புகள் பெருகிவிட்ட இக்காலத்தில் திருமணங்கள் ஆடம்பரமாக, தரையில், தண்ணீரில் மட்டுமின்றி பலுானில் பறந்தபடி ஆகாயத்திலும் வினோத திருமணங்கள் நடக்கின்றன.
மாப்பிள்ளை, புதுமண தம்பதி, பயணம், மாட்டுவண்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மேலுார்: மதுரை மாவட்டம் கீழையூரில் முன்னோர் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றில் நாட்டம் கொண்ட புதுமண தம்பதியர், திருமணம் முடிந்ததும் மாட்டு வண்டி பயணம் செய்து, நெல்மணி, ஜல்லிக்கட்டு காளையை வணங்கினர்.

வசதி, வாய்ப்புகள் பெருகிவிட்ட இக்காலத்தில் திருமணங்கள் ஆடம்பரமாக, தரையில், தண்ணீரில் மட்டுமின்றி பலுானில் பறந்தபடி ஆகாயத்திலும் வினோத திருமணங்கள் நடக்கின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழையூரில் புதுமணத்தம்பதியினர் மாட்டு வண்டியில் பயணித்து பாரம்பரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கீழையூரைச் சேர்ந்த கதிர், பி.இ., முடித்துவிட்டு மதுரை ஆவினில் பணியாற்றுகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி அஞ்சம்மைக்கும் அருகே உள்ள சிவபுரிப்பட்டி சிவன் கோயிலில் திருமணம் நடந்தது.

பின்னர் கீழையூர் திருமண மண்டபத்தில் இருந்து மணமக்கள் பாரம்பரியமாக முன்னோர் பயணம் செய்ததை நினைவு கூரும் வகையில் மாட்டு வண்டியில் மணமகன் வீட்டுக்குச் சென்றனர். மணமகன் வண்டி ஓட்ட, மணமகள் அவருடன் பயணித்தார். செல்லும் வழியில் மண்ணுக்கும், மாட்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக வயல்வெளியில் குவித்து வைத்திருந்த நெல் மணிகளையும், ஜல்லிக்கட்டு காளைகளின் காலில் விழுந்தும் வணங்கினர். புதுமணத் தம்பதியர் மாட்டு வண்டியில் மணமகன் வீட்டுக்குச் சென்றது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

r ravichandran - chennai,இந்தியா
28-ஜன-202313:30:52 IST Report Abuse
r ravichandran உண்மைதான், ஒவ்வொரு வகுப்பு திருமணங்களில் ஒவ்வொரு சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் உண்டு. அந்த காலங்களில் பிராமண வகுப்பு திருமணங்களில் கட்டு சாதம் என்ற ஒரு வழக்கம் உண்டு. மணமகன் குடும்பம் மதுரையில் இருக்கும், காஞ்சீபுரத்தில் பெண் எடுத்து இருப்பார்கள். 5 நாள் (அந்த காலத்தில்) திருமண நிகழ்ச்சி முடிந்ததும், 6 அல்லது 7 மாட்டு வண்டிகளில் மணமகன் வீட்டார் பெண்ணை அழைத்து கொண்டு மதுரைக்கு திரும்ப செல்வார்கள். அவர்கள் ஊர் திரும்ப 4 நாட்கள் ஆகும். அவர்கள் வழியில் உணவு அருந்த 50 பேர்களுக்கு தேவையான வித விதமான உணவு வகைகள் , பெண் வீட்டார் தயாரித்து கொடுத்து அனுப்பும் வழக்கத்திற்கு பெயர் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X