ஆஸி., ஓபன்: சபலென்கா சாம்பியன்

Added : ஜன 28, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-5' பெலாரசின் அரினா சபலென்கா, 25வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை
australiaopen, tennis, sabalanka

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-5' பெலாரசின் அரினா சபலென்கா, 25வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை ரிபாகினா 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட சபலென்கா, இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய சபலென்கா 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அசலென்கா 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றார். தவிர இது, இவரது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை (2019ல் யு.எஸ்., ஓபன், 2021ல் ஆஸி., ஓபன்) கோப்பை வென்றிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

Rpalnivelu - Bangalorw,இந்தியா
28-ஜன-202317:39:53 IST Report Abuse
Rpalnivelu விளம்பரக் கம்பெனி தூக்கிப் பிடிக்கும் கிரிக்கெட் மட்டுமே இந்தியர்களுக்கு பிடிக்கும் மத்ததெல்லாம் இங்கே ஒர்கவுட் ஆகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X