புதுடில்லி: புதுடில்லியில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்துக்கு, 'அம்ருத் உதான்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஜனாதிபதியின் ஊடக துணைச் செயலர் நவிகா குப்தா வெளியிட்ட அறிக்கை: ஜனாதிபதி மாளிகை யில், முகலாய மற்றும் பெர்சிய தோட்டங் களின் பாணியில் மூன்று தோட்டங்கள் உள்ளன. ஸ்ரீநகரில் உள்ள முகலாய தோட்டங்களால் கவரப்பட்ட பொதுமக்கள், இந்த தோட்டங்களில் ஒன்றை முகலாய தோட்டம் என அழைத்து வருகின்றனர். ஆனால், அது அதிகாரப்பூர்வ பெயர் கிடையாது.

தற்போது, நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், முகலாயத் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அமிர்த தோட்டம் என்ற அர்த்தத்தில், அம்ருத் உதான் என்ற பொதுவான பெயரை ஜனாதிபதி சூட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையின் ஆன்மாவாகக் கருதப்படும் அம்ருத் உதான், 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.