வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறிகிடந்த குப்பை: வைரலாகும் புகைப்படம் ?

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறிக்கிடந்த குப்பைகளை ரயில்வே ஊழியர் அகற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் வகையில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அவினாஷ் ஷரண் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக
 வந்தே பாரத் ரயில், சிதறிகிடந்த குப்பை,  புகைப்படம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறிக்கிடந்த குப்பைகளை ரயில்வே ஊழியர் அகற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் வகையில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவினாஷ் ஷரண் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி பகிர்ந்துள்ள படம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் வந்தே பாரத் ரயிலுக்குள், காலி தண்ணீர் பாட்டீல்கள், சாப்பிட்டு மிச்சமிருந்த உணவு பொட்டலங்கள், கேரி பைகள், சிதறிகிடப்பதை ஊழியர் சுத்தப்படுத்தும் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


latest tamil news


ரயில்நிலையங்கள், ரயில் பெட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கும், ரயிலை பயன்படுத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் இது போன்று பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர் என பலரும் கண்டனத்தை பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.முன்னதாக புகைபடத்தில் குறிப்பிட்ட வந்தே பாரத் எங்கிருந்து எந்த மாநிலத்திற்கு இயக்கப்படுகிறது என் விவரம் தெரியவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

29-ஜன-202308:07:04 IST Report Abuse
Krishna Moorthy இந்த விஷயத்தில் வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் பொறுப்பற்ற முறையில் தான் நடந்து கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
28-ஜன-202321:36:42 IST Report Abuse
Rajan ரயிலில் சிசி டிவி கமெராவை கொண்டு எடுத்த படம் இருந்தால் அதன் முலமாக தவறு செய்தவர்களை ஒருமுறை தண்டித்தால் மறுமுறை இந்த தவறு நடக்க வாய்ப்பிருக்காது. ஆக்க பூர்வமாக சிந்தித்து தவறுகளை திருத்த வேண்டிய நிலை தான் இன்று உள்ளது
Rate this:
Cancel
28-ஜன-202321:33:33 IST Report Abuse
Saai Sundharamurthy AVK பயணிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X