கோர்ட் விசாரணைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த வழக்கறிஞரை கண்டித்த நீதிபதி

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
கவுஹாத்தி: அசாம் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது ஜூன்ஸ் பேன்ட் அணிந்து வந்த வழக்கறிஞரை அறையிலிருந்து வெளியேற்றுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நடந்தது.அசாம் மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமின் வழக்கு ஒன்றில் ஆஜராக பி.கே. மஹாஜன் என்ற வழக்கறிஞர் வந்தார். அப்போது வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதி கல்யாண் சுரானா , அந்த வழக்கறிஞர் ஜீன்ஸ்
 கோர்ட், விசாரணை ,ஜீன்ஸ் , வழக்கறிஞர், நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

கவுஹாத்தி: அசாம் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது ஜூன்ஸ் பேன்ட் அணிந்து வந்த வழக்கறிஞரை அறையிலிருந்து வெளியேற்றுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நடந்தது.

அசாம் மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமின் வழக்கு ஒன்றில் ஆஜராக பி.கே. மஹாஜன் என்ற வழக்கறிஞர் வந்தார். அப்போது வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதி கல்யாண் சுரானா , அந்த வழக்கறிஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பதை கவனித்தார்.


latest tamil news

உடனே போலீசாரை அழைத்து அந்த வழக்கறிஞரை உடனே கோர்ட் அறையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டதுடன் விதி மீறிய வழக்கறிஞர் மஹாஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார்.


விசாரணை நடத்த வேண்டிய அனைத்து வழக்குகளையும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். ஜீன்ஸ் அணிந்து வந்த வழக்கறிஞரால், ஜாமின் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட வேறு சில மனுக்கள் ஒரு வாரம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
29-ஜன-202312:18:52 IST Report Abuse
Davamani Arumuga Gounder இது சரியில்லைதானே? .. யூனிபாஃம் இருக்கும் பள்ளிகளுக்கு எந்த கலரில் வேண்டுமானாலும் ஹிஜாப் அணிந்து செல்லலாமல்லவா? அது போன்றே கருப்புக்கலர் ஜீன்ஸ் அணிந்து ஒரு வழக்குரைஞர் சென்றால் மட்டும் என்ன தவறு?
Rate this:
Cancel
29-ஜன-202308:28:05 IST Report Abuse
Gopalakrishnan S வெளியேற்ற உத்தரவிடும் அளவிற்கு வழக்கறிஞர்கள் செல்லக்கூடாது. தன் நடவடிக்கையை நீதிமன்றம் ரசிக்கவில்லை எனபதை குறிப்பால் உணர்ந்து மன்னிப்பு கேட்டபடி வெளியேறி இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X