எஸ்பிளனேடு,சென்னை, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்றதாக, ஆறு பேரை எஸ்பிளனேடு போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த நிஷாம் முகமது, 25; அனிஷ் முகமது சித்திக், 23; புழலை சேர்ந்த நவீன் குமார், 25; எம்.கே.பி.நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, 25 ஆகிய நால்வரையும் எஸ்பிளனேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.