திருவாலங்காடு,--கனகம்மாசத்திரம் - தக்கோலம் நெடுஞ்சாலையில், முத்துக்கொண்டாபுரத்தில் கொசஸ்தலையாற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலத்தை இரவில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடக்க உயர்மட்ட பாலத்தின்இருபுறமும் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த உயர் மின் விளக்குகள் பகலிலும் எரிந்த படி உள்ளது. இதனால் மின்சாரம் வீணாவதுடன் தேவையின்றி மின் செலவீனம் அதிகரிக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பகலில் மின் விளக்கை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.