அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணையை ஆர்.டி.ஓ., ரவிக்குமார் வழங்கினார்.
இதில் ஆர்.டி.ஓ., கல்யாணகுமார், தாசில்தார் அறிவழகன், நகராட்சி கமிஷனர் அசோக்குமார், கவுன்சிலர் சிவப்பிரகாசம், எஸ் பி கே கல்வி குழும நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.