Call for inventory of produce | விளைபொருட்களை இருப்பு வைக்க அழைப்பு| Dinamalar

விளைபொருட்களை இருப்பு வைக்க அழைப்பு

Added : ஜன 29, 2023 | |
விருதுநகர்,--விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது: விற்பனை குழுவில் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகியவை 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை கூடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உலர்களங்கள், பரிவர்த்தனை



விருதுநகர்,--விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது: விற்பனை குழுவில் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகியவை 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை கூடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உலர்களங்கள், பரிவர்த்தனை கூடங்கள், ஏல கொட்டகைகள், சேமிப்பு கோடவுன்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 ஆயிரம் மெ. டன் கொள்ளளவு கொண்ட 3 சேமிப்பு கோடவுன்கள், சாத்துாரில் 36,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கோடவுன்கள், அருப்புக்கோட்டையில் 4600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 4 சேமிப்பு கோடவுன்கள், மொத்தம் 1,8 6,000 மெ.டன் கொள்ளவு கொண்ட 17 கோடவுன்கள் உள்ளன.விவசாயிகள் விளைபொருளை குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 10 பைசா வீதம், வியாபாரிகள் குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 20 பைசா வீதமும் குறைந்த வாடகையில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து நல்ல விலை ஏற்றம் வரும் போது விற்பனை செய்து பயன்பெறலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X