படிக்கட்டில் மாணவர்கள் பயணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஜன 29, 2023 | |
Advertisement
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் அரசு, தனியார் பஸ்களில் தினமும் படிக்கட்டில் தொங்கிய படி மாணவர்கள்ஆபத்தான பயணம் செய்வது தொடர்வதால் இதனை தடுக்க போலீசார், போக்குவரத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும். ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள்இல்லாததால் உயிருக்கு ஆபத்தான
 படிக்கட்டில் மாணவர்கள் பயணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை



ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் அரசு, தனியார் பஸ்களில் தினமும் படிக்கட்டில் தொங்கிய படி மாணவர்கள்ஆபத்தான பயணம் செய்வது தொடர்வதால் இதனை தடுக்க போலீசார், போக்குவரத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும்.

ராமநாதபுரம் பகுதியில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள்இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

ராமநாதபுரம் நகருக்கு நகர் பகுதி மட்டுமின்றி கிராமங்களில் இருந்து கல்லுாரி, பள்ளிகளில் படிக்க பல ஆயிரம் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு வசதியாக கூடுதல் டவுன் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் காலை, மாலையில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. போலீசார், கல்வித்துறை, போக்குவரத்துறை அதிகாரிகள் இதனை கண்டும் காணாதது போல உள்ளனர்.

மாணவர்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், பள்ளி நேரம் துவங்கும், முடியும் நேரங்களில் மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X