மோடி ஏன் கவலைப்படுகிறார்?

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (35) | |
Advertisement
சமீபத்தில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சில சீனியர் தலைவர்கள், பிரதமர் மோடி ஏன் கவலையுடன் காணப் படுகிறார் என, கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொன்னாராம். 'உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சமீபத்தில் பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சில சீனியர் தலைவர்கள், பிரதமர் மோடி ஏன் கவலையுடன் காணப் படுகிறார் என, கேள்வி எழுப்பியுள்ளனர்.



latest tamil news


இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொன்னாராம். 'உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான திட்டங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என, பலவற்றை மோடி செய்து வருகிறார்.

'இருந்தும், சிலர் அவரை தேவையில்லாமல் குறை கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சதித் திட்டம் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது என, எட்டு வெளிநாட்டு அதிபர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்' என அமித் ஷா சொன்னதும், அனைவரும் அதிர்ந்து போயினர்.


latest tamil news


நம் நாட்டில் மோடிக்கு எதிராக செயல்படும் சில சக்திகளுக்கு, இந்த வெளிநாட்டு அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் தருகின்றனராம். இதை வைத்து மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு அதிபர்களின் இந்த திட்டத்தை, பிரதமர் மோடி தன்னிடம் தகுந்த ஆதாரங்களுடன் காட்டியதாக அமித் ஷா தெரிவித்தாராம். இதனால் தான் பிரதமர் மோடி கவலையுடன் காணப்பட்டார் எனவும் சொல்லியுள்ளார் அமித் ஷா.

வரும் 2024 லோக்சபா தேர்தலில் இந்த விஷயத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த, பா.ஜ., முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்கின்றனர் சீனியர் தலைவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (35)

Stalin Soundarapandian - Al Jubaila,சவுதி அரேபியா
29-ஜன-202322:16:48 IST Report Abuse
Stalin Soundarapandian வெளிநாட்டுப்பணம் தேச விரோத சக்திகளுக்கு வருவதற்கான ஆதாரம் மோடியிடம் இருக்கிறது என்றால், நடவடிக்கை எடுப்பதற்கு எதனால் தயக்கம்?
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-ஜன-202315:04:20 IST Report Abuse
Raj அதாணியோட தகிடு தத்தங்கள் வெளியாகிடிச்சென்ற கவலையாக இருக்குமோ
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29-ஜன-202314:46:40 IST Report Abuse
Barakat Ali (உலகநாடுகள் அனைத்தும் ஒரே குடும்பம்).....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X