ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை எடுப்பது எப்போது?

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை-வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 31 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரம் குறித்து விசாரணை முடிந்தும், மின் வாரி யம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. துாத்துக்குடியில் தலா 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகள் உடைய,
நிலக்கரி, மின் வாரியம், அனல் மின் நிலையம், மின் ஊழியர்,



சென்னை-வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 31 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரம் குறித்து விசாரணை முடிந்தும், மின் வாரி யம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. துாத்துக்குடியில் தலா 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது.

2021ல் வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் ₹100 கோடி மதிப்பிலான நிலக்கரி மாயமனதாக புகார் எழுந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, நிலக்கரி மயமானதை உறுதி செய்தனர். விசாரணை நடத்த, மின் வாரிய இயக்குநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. நிலக்கரி மாயமானதை உறுதி செய்து, அந்த குழு அரசுக்கு அறிக்கையும் அளித்தது. நிலக்கரி மாயமானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்தது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஒரு சிலரை காப்பற்றவே நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மின் ஊழியர்கள் சொல்கிறார்கள்.

கடந்த 2021ல், வட சென்னை மின் நிலையத்தின் பதிவேட்டில் உள்ள நிலக்கரி அளவுக்கும், அங்கு இருப்பில் உள்ள நிலக்கரிக்கும், 23.80 கோடி கிலோ குறைவாக இருந்தது.

மேலும், துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில்பதிவேட்டில் உள்ள அளவை விட, இருப்பில் உள்ள நிலக்கரி, 7.20 கோடி குறைவாக இருந்தது. இதை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, உறுதி செய்தனர்.

மாயமான நிலக்கரியின்மதிப்பு, 100 கோடி ரூபாய். இதுதொடர்பாக விசாரணை நடத்த, மின் வாரிய இயக்குனர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு கள ஆய்வு செய்து, நிலக்கரி மாயமான விவகாரத்தை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தது.


latest tamil news


இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விஜிலென்ஸ் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நிலக்கரி மாயமானதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படஇருப்பதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிலக்கரி மாயமானது உறுதி செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு ஆகிறது. இருப்பினும் இதுவரை அதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மின் வாரியம் தாமதம் செய்து வருகிறது.

இது குறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில்,'யாரை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இழப்பு ஏற்படுத்திய தொகையை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

DVRR - Kolkata,இந்தியா
29-ஜன-202316:38:31 IST Report Abuse
DVRR அந்த நிலக்கரி, மழை நீரில் கலந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜன-202311:23:55 IST Report Abuse
Lion Drsekar சிறந்த வழக்கறிஞரை நியமித்தால் அழகாக வெளியே வரலாம், அந்த காலங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்று அறிந்து, அந்த அளவுக்கு கரி பயன்படுத்தப்பட்டுவிட்டது, அவைகளை கணக்கில் காட்டாத தவறி விட்டார்கள், ஆகவே காணாமல் போன கறிக்கு இணையாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு விட்டது என்று கணக்கு காட்டினால் போதுமே, சர்க்கரையை எறும்பு தின்றது, கோணியை எலி கடித்து விட்டது, கிழிந்து கொலையை கரையான் உண்டுவிட்டது என்று எவ்வளவு முன்னுதாரணங்கள் உள்ளன, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
c.k.sundar rao - MYSORE,இந்தியா
29-ஜன-202311:22:53 IST Report Abuse
c.k.sundar rao People involved in the scam may be ministers own man.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X