என்ன ரகசிய பேச்சு?

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர். இதில், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவும் பங்கேற்றார். மோடியும், அமித் ஷாவும், சைலேந்திர பாபுவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. இந்த சில நிமிட பேச்சு தனியாக நடந்ததாம். இது, புதுடில்லி அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர். இதில், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவும் பங்கேற்றார்.



latest tamil news


மோடியும், அமித் ஷாவும், சைலேந்திர பாபுவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. இந்த சில நிமிட பேச்சு தனியாக நடந்ததாம். இது, புதுடில்லி அரசியல் வட்டாரங்களை பரபரப்பில் ஆழ்த்தியதோடு, பல சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.


latest tamil news


'தமிழக கவர்னர் ரவி குறித்து ஏதாவது பேசினரா, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா, தி.மு.க.,வைப் பற்றி எதுவும் கேட்டனரா' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கவர்னர் பற்றி சைலேந்திரபாபுவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டி.ஜி.பி., வாயிலாக ஏதாவது சேதி அனுப்பப்படுகிறதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் என்ன பேசினர் என்பது அந்த மூவருக்கு மட்டுமே வெளிச்சம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

Gnanam - Nagercoil,இந்தியா
29-ஜன-202319:28:26 IST Report Abuse
Gnanam ரகசியம்னா அது ரகசியமாகவே இருக்கட்டுமே. வீணாக யூகித்து மண்டையை உடைக்கவேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
29-ஜன-202318:56:14 IST Report Abuse
Raj இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உலகம் நம்மை நம்பும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-ஜன-202316:35:37 IST Report Abuse
DVRR அவர்கள் பேசினது இப்படி இருக்கும் 1) சைலேந்திர பாபு நாம் பேசிக்கொண்டதை மடியல் அரசு முதல்வரிடம் அச்சு அசலாக சொல்லிவிடும் ஆகவே அவர் எதிரில் பேசவேண்டாம் 2) கவர்னர் ரவி சொல்வது போல சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X