எக்ஸ்குளுசிவ் செய்தி

அண்ணாமலை பாதயாத்திரை: புதுடில்லியில் 'கன்ட்ரோல் ரூம்'

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை ஏப்ரல் மாதம் திருச்செந்துாரிலிருந்து துவங்க உள்ளது. இதற்கான ஆயத்தங்கள், பா.ஜ., சீனியர் தலைவர் பி.எல். சந்தோஷ் தலைமையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.இதற்கென சிறப்பு 'கன்ட்ரோல் ரூம்' புதுடில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தயாராகிவிட்டது. இந்த அறையில், அண்ணாமலை எந்த ஊர்களுக்கு செல்கிறார் என்கிற வரைபடமும்
annamalai, bjp, delhiush, controlroom, டில்லி உஷ்ஷ்ஷ், அண்ணாமலை, பாஜ, கன்ட்ரோல் ரூம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை ஏப்ரல் மாதம் திருச்செந்துாரிலிருந்து துவங்க உள்ளது. இதற்கான ஆயத்தங்கள், பா.ஜ., சீனியர் தலைவர் பி.எல். சந்தோஷ் தலைமையில் வேகமாக நடைபெற்று வருகின்றன.


இதற்கென சிறப்பு 'கன்ட்ரோல் ரூம்' புதுடில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் தயாராகிவிட்டது. இந்த அறையில், அண்ணாமலை எந்த ஊர்களுக்கு செல்கிறார் என்கிற வரைபடமும் வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நடைபெற உள்ள பாதயாத்திரைக்கு, புதுடில்லியில் ஏன் கண்ட்ரோல் ரூம் என, கேள்வி கேட்கின்றனர். இதற்கு காரணம் உள்ளதாம். தெலுங்கானா பா.ஜ., தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் பண்டி மற்றும் பா.ஜ.,வின் தேசிய செயலர் சுனில் தியோதர் ஆகியோர் சந்தோஷுடன் சேர்ந்து, அண்ணாமலையின் இந்த பாதயாத்திரையை கண்காணிக்க உள்ளனர்.


இப்படி வேறு வேறு மாநிலங்களில் உள்ள மூவர், பாதயாத்திரையை கண்காணிக்க உள்ளதால் கன்ட்ரோல் ரூம் புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் உள்ளது. அதோடு பா.ஜ., சீனியர் தலைவர்களும் அடிக்கடி கன்ட்ரோல் ரூமுக்கு வந்து என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202310:52:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சும்மா ஏசி காரில் ஊர் சுத்தலாம்னு வாயை விட்டாரு. இப்போ அதுவே வினையாய் போய்விட்டது. மூணு பேரு கண்காணிக்கிறாங்க. இவர் வேலை பாக்குறாரா இல்லை சொகுசா ஊர சுத்துறாரான்னுட்டு. அசிங்கப்பட்டார் ஐபிஎஸ்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202310:50:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வார் ரூம்லே வீடியோ பாத்து பொழுதை கழிச்சிக்கிட்டு இருந்தாரு. இப்போ பாதயாத்திரைன்னு சொல்லி இவரை வாட்ச் பண்றதுக்கு டில்லியில் ஒரு கண்ட்ரோல்ரூம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
31-ஜன-202310:49:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தாளு வெறும் வாய்சவடால்ன்னு டில்லிக்கு தெரிந்து போய்விட்டது. அதனால் தான் அங்கே இருந்து மானிட்டர் பண்றாங்க. சும்மா நடைபயணம் போறேன்னுட்டு எங்கேயாவது மல்லாக்கா படுத்துகிட்டு கட்சி ஆபிசுக்கு வந்த விடீயோக்களை பாத்துக்கிட்டு இருக்காரான்னு வாட்ச் பண்றதுக்காக இந்த ஏற்பாடாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X