முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு: கொட்டும் மழையில் அணிவகுப்பு

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் விழா பார்லிமென்ட் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் இன்று(ஜன.,29) நடைபெற்றது. குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள விஜய் சவுக் என்ற பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் விழா பார்லிமென்ட் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் இன்று(ஜன.,29) நடைபெற்றது.




latest tamil news


குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள விஜய் சவுக் என்ற பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த 'பீட்டிங் தி ரிட்ரீட்' எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. அந்த வகையில், இன்று(ஜன.,29) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மழை கொட்டியது.



latest tamil news


ஆனால் கொட்டும் மழையில், முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



latest tamil news


வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கின் முகப்பில் நடைபெற உள்ள படைவீடு திரும்புதல் விழாவின்போது முதல்முறையாக, முப்பரிமாண ஒளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் நான்கு நாள்கள் நீடிக்கும் குடியரசு தின விழாவின் நிறைவைக் குறிப்பிடும் வகையில், படைகள் பாசறைக்குத் திரும்புதல் விழாவானது தேசத்தின் பெருமிதமாக கருதப்படுகிறது.


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Viswam - Mumbai,இந்தியா
30-ஜன-202306:50:13 IST Report Abuse
Viswam சுதந்திரத்திற்கு பிறகு ஐம்பதில் இந்தியா வந்த எலிசபெத் ராணியையும் பிலிப் ராஜாவையும் வரவேற்பதற்காக நேரு மேஜர் ராபர்ட் மூலமாக செய்த நிகழ்ச்சி இது. பிறகு இது ஜனாதிபதிக்காக மாறியது. நேற்று கொட்டும் மழையிலும் குளிரிலும் அவர்கள் பேண்ட் வாசித்தபோது கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் ராணுவம் ஆயிற்றே, எல்லையில் குளிரும் மழையையும் பார்த்தால் தேசத்தின் கதி ? இதை பார்ப்பதற்காக ஸ்வெட்டர் மற்றும் ரயின்கோட் போட்டு நின்றவர்களை பார்த்தபோது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது அதனால் இந்த பேண்ட் வாத்தியம் நடக்கிறது என்று தோன்றுகிறது. தவறாது கடமை ஆற்றும் ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
29-ஜன-202320:08:34 IST Report Abuse
kulandai kannan நேரு வகையறாக்களின் மற்றொரு தவறு. கடுங்குளிர் ஜனவரி க்கு பதில், ஃபிப்ரவரி 26ல் வைத்திருக்கலாமே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X