விடுதலை பெற்ற பின்னரும் ஆங்கில வழி கல்வி: கவர்னர் ரவி

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: ''புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே, இந்தியாவின் இலக்கை அடைய முடியும். இதை அறியாமையால் சிலர், எதிர்த்து வருகின்றனர்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா விழா, சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: என்னைப் பொருத்தவரை, பகவத்கீதையை போன்ற சிறந்த நுால் வேறொன்றும் இல்லை. வாழ்க்கைக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ''புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே, இந்தியாவின் இலக்கை அடைய முடியும். இதை அறியாமையால் சிலர், எதிர்த்து வருகின்றனர்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.



latest tamil news

சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா விழா, சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: என்னைப் பொருத்தவரை, பகவத்கீதையை போன்ற சிறந்த நுால் வேறொன்றும் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது.


பூமியில் பாரதம் மட்டுமே, உலகில் அனைவரும் ஒன்று என்கிற பார்வையை உடையது. நம் பாதையை தொலைத்ததால், பாரதத்தின் உன்னதமான பாதையை உலகத்திற்கு காட்ட தவறிவிட்டோம்.


தற்போது, வலிமையான தலைமையாலும், அவரது தெளிவான பார்வையாலும், சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்கும் வகையில், பழைய நிலைமை சீராகி வருகிறது. இனி நாம் நேரத்தை வீணாக்க கூடாது. அடுத்த, 25 ஆண்டுகளில், மகிழ்ச்சியான புதிய உலகை வழிநடத்தும் நிலைக்கு, இந்தியாவை மாற்றும் கடமை நமக்கு உள்ளது.


புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை அறியாமையால் எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே, இந்தியாவின் இலக்கை அடைய முடியும். ஆங்கிலேய ஆட்சி மகிழ்வானது என, உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுவது பரிதாபத்திற்குரியது.


ஜனநாயகத்திற்கு ஆபிரகாம் லிங்கனை உதாரணம் காட்டுகின்றனர். அவருடைய காலத்தில், பெண்களுக்கு உரிமை இல்லை. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளாக, பெண்களுக்கு இந்தியா அதிகாரமும், சுதந்திரமும் அளித்துள்ளது.


latest tamil news

நம் பாரம்பரியம் மீது பெருமை கொள்ள வேண்டும். புராதன சின்னங்கள் நாம் யார் என்பதை காட்டுகிறது; அதை பேணி போற்ற வேண்டும். நம் கடமையை நிறைவேற்ற வேண்டும்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


ஆங்கிலேய காலத்தில் இருந்து, பிரிவினை மேலோங்கி உள்ளது. அது, இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது. அதை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

30-ஜன-202311:42:28 IST Report Abuse
அப்புசாமி தனக்கே தமிழ் தகராறாம் அடுத்தவனுக்கு ஆங்கிலம் வாணாமாம்.
Rate this:
30-ஜன-202316:25:52 IST Report Abuse
ஆரூர் ரங்ஆங்கில வழியில்தானே டிகிரி படித்தார்? தொடர்ந்து இரண்டு ஆங்கில வார்த்தைகளை சுயமாக பேசத்🤔 தெரியவில்லையே....
Rate this:
Cancel
30-ஜன-202310:09:40 IST Report Abuse
ஆரூர் ரங் ஆங்கிலவழிக் கல்வி வேறு. ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பது வேறு. ரஷ்ய ஜப்பான் ஜெர்மனியில்🤔 அவரவர் மொழியில்தான் கல்வி. ஆங்கிலம் கற்க விருப்பமுள்ளவர்கள் அதனையும் கற்றுக் கொள்கிறார்கள். புரியாத புது மொழியில் கல்வி கற்பது அபத்தம்.
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-202308:43:14 IST Report Abuse
hari 500ரூபா எக்ஸ்ட்ரா வாங்கிட்டு ஜைஹிந்த்ப்புறம் புலம்புது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X