ஈ.வெ.ரா., சிலை அகற்றிய தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றம்: கலெக்டர், எஸ்.பி., 'சப்பைக்கட்டு'

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார்.இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்று தான்
EV Ra,Tahsildar, DSP, Collector, SP, ஈவெரா, சிலை, தாசில்தார், டிஎஸ்பி, கலெக்டர், எஸ்பி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் அனுமதியின்றி வைத்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றியதற்காக, தாசில்தார், டி.எஸ்.பி., மாற்றப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர், உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி இளங்கோவனின் புதிய வீட்டு முகப்பில், மார்பளவு ஈ.வெ.ரா., சிலையை நிறுவி இருந்தார்.

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அரசிடம் அனுமதி பெற்று தான் சிலை வைக்க முடியும் எனக்கூறி, தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று முன்தினம் சிலையை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக, தாசில்தார் கண்ணன், வன திட்ட அலுவலராக மாற்றப்பட்டார். டி.எஸ்.பி., கணேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news

அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட சிலையை அகற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், ''சிலையை அகற்றியதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக தாசில்தார் மாற்றப்பட்டுள்ளார். அரசிடம் அனுமதி பெறாமல் சிலை அமைத்தது தவறு தான்.

''அதே நேரம் அவர்கள் தற்போதைக்கு சிலையை மூடிக் கொள்கிறோம். அனுமதிக்கு பின் திறந்து கொள்வதாக கேட்டுள்ளனர். இதில், சமரசம் அடையாத தாசில்தாரால் இச்சூழல் வந்துவிட்டது,'' என்றார்.

எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில், ''டி.எஸ்.பி., கணேஷ்குமாரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-ஜன-202306:48:06 IST Report Abuse
NicoleThomson அட அட என்ன ஒரு பகுத்தறிவு, அதிகாரிகளே விழுந்து விழுந்து வோட்டு போட்டீங்க, முதலில் ஜாக்ட்டோ ஜியோ பேச்சு கேட்டு வோட்டு போட்ட ஆசிரிய பெருமக்களுக்கு சொருகுனாங்க, பின்னர் நறுக்கி போட்டாங்க, இப்போ ரெவின்யூ, காவல், என்னவெல்லாம் இருக்கோ இந்த புலிகேசி மன்னனின் கூத்துக்களை பார்க்க, "போடுங்கம்மா வோட்டு, விடியலற்ற இருளினை நோக்கி"
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
30-ஜன-202314:53:11 IST Report Abuse
Barakat Ali தமிழகத்துக்கு வேண்டாத ஆணிகள் பலவுண்டு .... அதில் முதல் ஆணி ஈரவெங்காயம் ....
Rate this:
Cancel
30-ஜன-202311:14:58 IST Report Abuse
Balaji Radhakrishnan நேர்மையான நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்ற உத்தரவு. இது என்ன மாதிரி அரசு. நிச்சயம் திமுக கட்சி அழியப்போவது உறுதி. இனி எக்காலத்திலும் அரசியலில் ஈடுபட முடியாத படி இந்து மக்கள் ஈடுபடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X