''அவருக்கு நிறைய வேலை இருக்குன்னு சொல்றாங்க பா...''என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருவே அந்த, 'பிசி' மனுஷன்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான, தி.மு.க., தேர்தல் பணிக் குழுவுல, அமைச்சர்கள் நிறைய பேருக்கு இடம் குடுத்திருக்காவ... ஆனா, முதல்வரின் மகன் உதயநிதி பெயர் அதுல இல்லை பா...
![]()
|
''நட்சத்திர பேச்சாளரான அவர் பெயர் இல்லையேன்னு இளைஞர் அணியினர் வருத்தப் பட்டிருக்காங்க... ஆனா, இளைஞரணி சார்புல, மாவட்ட வாரியா, நிர்வாகிகள் நியமனத்துக்கான நேர்காணல் நடத்துற பணிகள்ல உதயநிதி தீவிரமாக இருக்காரு...
''அதான், அவரை தேர்தல் பணிக்குழுவுல சேர்க்கலை... ஆனா, 'தேர்தல் நெருக்கத்துல தொகுதியில வீதி வீதியா பிரசாரம் பண்றதுக்கு அவர் வந்துடுவார்'னு, கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.