பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஹுரியத் அலுவலகத்தை முடக்கியது என்.ஐ.ஏ.,
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஹுரியத் அலுவலகத்தை முடக்கியது என்.ஐ.ஏ.,

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஹுரியத் அலுவலகத்தை முடக்கியது என்.ஐ.ஏ.,

Added : ஜன 30, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாடு அலுவலகத்தை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை கொள்கையாக உடைய, 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாட்டின் அலுவலகம்,
Terrorist funding: NIA freezes Hurriyat office   பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: ஹுரியத் அலுவலகத்தை முடக்கியது என்.ஐ.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர் : பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாடு அலுவலகத்தை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை கொள்கையாக உடைய, 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான அனைத்து ஹுரியத் மாநாட்டின் அலுவலகம், ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதியில் உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் போராட்டத்தை துாண்டும் வகையில், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்ததாகக் கூறி, ஹுரியத் மாநாடு அலுவலக நிர்வாகிகளில் ஒருவரான, நயீம் அகமது கானை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், 2017ல் கைது செய்தனர்.


latest tamil news


நீதிமன்ற காவலில் உள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவருக்கு சொந்தமான அனைத்து ஹுரியத் மாநாடு அலுவலகத்தை என்.ஐ.ஏ., அமைப்பு நேற்று முன்தினம் முடக்கியது. புதுடில்லி பட்டியாலா சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து, இதற்கான 'நோட்டீஸ்' அலுவலக வெளிப்புறச் சுவரில் ஒட்டப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
30-ஜன-202309:47:14 IST Report Abuse
Bye Pass லோக்கல் மற்றும் வெளி மாநில இளைஞர்களுக்கும் மாதம் பத்தாயிரம் அல்லது சம்பளம் கொடுத்து மரங்கள் பயிரிட சொல்லி பராமரிக்கலாம்.. பாப்புலர் வில்லோ அக்ரூட் ஆப்பிள் மரங்கள் நன்றாக வளரும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-ஜன-202306:52:16 IST Report Abuse
Lion Drsekar ஆளும் கட்சியி9னார்கள் தீவிரவாதிகள் நடவடிக்கை என்பார்கள் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவருவோம் என்று கூறி செயல்படுத்துவார்கள், நாட்டுக்கு என்று ஒரு சுதந்திரமும் இல்லாமல் போனது வருத்தம், ஏதோ முப்படையினர் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், இதே போன்று காவல்துறையினருக்கும் சுதந்திரம் கொடுத்தால் நம் நாடு சுதந்திர பூமியாக இருக்கும் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X