விமானங்களை போல குப்பை அகற்ற 'வந்தே பாரத்' ரயில்களில் மாற்று ஏற்பாடு

Added : ஜன 30, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: 'வந்தே பாரத்' ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல் மாற்றப்பட்டு இருப்பதாகவும், பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி உள்ளார். வந்தே பாரத் ரயில்களில், இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் குடிநீர் பாட்டில்கள், உணவு உண்ட தட்டுகள் இரைந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில்
Vande Bharat, trains,garbage,வந்தே பாரத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'வந்தே பாரத்' ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல் மாற்றப்பட்டு இருப்பதாகவும், பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தி உள்ளார்.

வந்தே பாரத் ரயில்களில், இரு பெட்டிகளை இணைக்கும் பகுதியில் குடிநீர் பாட்டில்கள், உணவு உண்ட தட்டுகள் இரைந்து கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் - ஆந்திராவின் விசாகப்பட்டினம் இடையிலான வந்தே பாரத் ரயிலில், துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தும், விசாகப்பட்டினம் ரயில் நிலையம் வந்து சேர்ந்ததும், பெட்டிகளில் குப்பை இரைந்து கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

'விமானங்களுக்கு இணையான சேவைகளை வழங்கும் வந்தே பாரத் ரயிலை பயணியர் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும். குப்பையை அதற்குரிய தொட்டிகளில் மட்டுமே பயணியர் போட வேண்டும்' என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


latest tamil news

இந்நிலையில், வந்தே பாரத் ரயியில் குப்பையை அகற்றும் பணிக்கு மாற்று ஏற்பாடுகளை ரயில்வே அமைச்சகம் செய்துள்ளது.

விமானங்களில் இருப்பதை போல, ரயில் பயணத்தின் போது, துப்புரவு பணியாளர் ஒவ்வொரு இருக்கைக்கும் வந்து, பயணியரிடம் உள்ள காலி பாட்டில்கள், தட்டுகள் உள்ளிட்ட குப்பையை வாங்கிச் செல்லும் புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

''பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30-ஜன-202319:34:22 IST Report Abuse
Gokul Krishnan எல்லாம் தனி நபர் ஒழுக்க கேடு தான் காரணம் இதே நபர்கள் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு சென்றால் அடங்கி ஒடுங்கி நடந்து விதிகளை பின்பற்றுவார்கள்
Rate this:
Cancel
30-ஜன-202317:36:51 IST Report Abuse
அப்புசாமி வெளிநாடுகளின் சதித்திட்டமா இருக்கலாம்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
30-ஜன-202313:52:49 IST Report Abuse
N Annamalai அருமையான திட்டம் .மக்கள் ஒத்துழைக்க வேண்டும் .மிக கடினம் .அபராதம் போடுவோம் என்றால் கேப்பார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X