''செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் எதை செய்தாலும் பிரச்னையாறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''போன வருஷம், டில்லியில நடந்த குடியரசு தின விழா அணிவகுப்புல, தமிழக அரசு ஊர்திக்கு வாய்ப்பு தரல... இதுக்கு, நம்ம செய்தித் துறை அதிகாரிகளே காரணம்னு புகார்கள் எழுந்தது ஓய்...
''இந்த வருஷம் குடியரசு தின அணிவகுப்புல, தமிழக அரசு ஊர்திக்கு இடம் குடுத்தா... இந்த ஊர்தியில, நாட்டுப்புறக் கலைகள் நடத்திய குழு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவருடையதாம் ஓய்...
''இவர், ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்குல, சிறை தண்டனை விதிச்சப்ப, கருணாநிதியை கண்டிச்சு, அண்ணாதுரை சமாதியில, நுாற்றுக்கணக்கான கலைஞர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவராம் ஓய்...
![]()
|
''தி.மு.க., ஆட்சிக்கு வந்த புதுசுல, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலரா இவரை நியமிச்சா... அப்பறமா, விபரம் தெரிஞ்சதும், ரெண்டே நாள்ல அவரை நீக்கிட்டா ஓய்...
''இப்ப, 'குடியரசு தின அணிவகுப்புல எப்படி அவருக்கு அதிகாரிகள் அனுமதி குடுத்தா... அவரை விட்டா, வேற கலைஞர்களே இல்லையா'ன்னு தி.மு.க.,வினர் முணுமுணுத்துண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
''சோமசுந்தரம் இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.