செத்துப்போன பாம்பை யார் நினைப்பார்கள்? டி.ஆர்.பாலுக்கு ஹிந்து முன்னணி பதிலடி

Added : ஜன 30, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
திருப்பூர்: ''செத்துப்போன பாம்பை யார் நினைப்பார்கள்?,'' என்று, டி.ஆர்.பாலுவின் 'கையை வெட்டுவேன்' பேச்சுக்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பதிலடி கொடுத்துள்ளார்.திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுக்குழுவை துவக்கி வைத்த, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம்
TR Balu, DMK, temple, Kadeswara Subramaniam, டிஆர் பாலு, ஹிந்து முன்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ''செத்துப்போன பாம்பை யார் நினைப்பார்கள்?,'' என்று, டி.ஆர்.பாலுவின் 'கையை வெட்டுவேன்' பேச்சுக்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பூரில் நேற்று நடந்த ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுக்குழுவை துவக்கி வைத்த, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:

திருப்பூர், கோவை மாவட்டங்களில், வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர் சட்ட விரோதமாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.


latest tamil news

மாநில அரசு, முறைகேடாக தங்கியுள்ள நபர்களை கண்டறிந்து, வெளியேற்ற வேண்டும். போலீஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து, சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கண்டறிய வேண்டும்.பழநி கோவில் கும்பாபிஷேகம், ஆகம விதிகளுக்கு மாறாக நடந்துள்ளது; இதனால், அரசுக்கு கேடு விளையும் என, ஆன்மிக பெரியோர் கூறுகின்றனர். தமிழக அரசுக்கு கெட்ட காலம் வந்து விட்டது என்றே கருதுகிறோம்.

எம்.பி., டி.ஆர்.பாலு, சுயலாப நோக்கத்துடன், 'சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்கிறார். 'வீரமணி மீது கை வைத்தால், கையை வெட்டுவேன்' என்று கூறுகிறார். செத்துப்போன பாம்பை யாரும் நினைப்பாரில்லை. அவரது அமைப்பும் காணாமல் போய்விட்டது, மக்களும் அவரை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

INDIAN Kumar - chennai,இந்தியா
30-ஜன-202318:01:52 IST Report Abuse
INDIAN Kumar 99.99% கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் 0.1% தான் கறுப்பர் கூட்டம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜன-202317:23:33 IST Report Abuse
M  Ramachandran செத்துப்போன பாம்பை யாரும் நினைப்பாரில்லை...அண்ட (யுனிவர்சல்) புளுகன் டி ஆர் பாலு வுக்கும் அடுத்த தேர்தலுக்கு பிறகு அந்தநிலை வரும் .எல்லாம் முழு பூசணிக்காயயய் சோற்றில் மறைக்கும் கூட்டத்தின் சிறு தலைவன். மக்கலிய்ய பற்றி நினைப்பு இல்லாமல் சுய நல குறிக்கோளுடன் வாழும் கும்பலை சேர்ந்தவன். அடுத்தது போய் நிகர் பல்கலைக்கழக பெண்மணி கணிமொழி வாயய் திறந்தால் பொய். சொல்லிய வாய் அடுத்த நிமிடம் நானா எஙகு சொன்னேன் என்று அடுத்த பொய்.மொழி
Rate this:
Cancel
Venkataraman - New Delhi,இந்தியா
30-ஜன-202317:14:01 IST Report Abuse
Venkataraman மேடையில் ஏறி மைக்கை பிடித்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என சில கழகத் தலைவர்கள் நினைக்கிறார்கள். S.பாரதி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, பொன்முடி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் கீழ்த்தரமாக பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் மக்கள் அந்த இடத்திலேயே கேள்வி கேட்டு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X