கிராம பூஜாரிகளுக்கு ஊக்க தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
ராமேஸ்வரம்: கிராம கோவில்களில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், என கிராம பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை,அருள்வாக்கு அருள்வோர் பேரவையின்மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு வி.எச்.பி., நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ராமேஸ்வரம்: கிராம கோவில்களில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், என கிராம பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.



latest tamil news



ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை,அருள்வாக்கு அருள்வோர் பேரவையின்மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு வி.எச்.பி., நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் தலைமை வகித்தார். வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர். கோபால் ஜி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், 2021ல் தி.மு.க., சட்டசபை தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என கூறியது. இன்று வரை அமல்படுத்தவில்லை. எனவே அனைத்து பூஜாரிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

சிறுபான்மையர் வழிபாட்டு தலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கிய ஓய்வூதியம், அவரது மறைவிற்கு பின் மனைவிக்கு வழங்குவது போல், கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பின் மனைவிகளுக்கு வழங்க வேண்டும்.


latest tamil news



2001 மார்ச்சில் அப்போதைய முதல்வர் கருணாநிதி கிராம கோவில் பூஜாரிகள் நல வாரியம் அமைத்து, இதுவரை செயல்படாமல் முடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர் புதுப்பித்தல் நடக்கவில்லை. புதிய நலவாரிய குழு அமைத்து, விண்ணப்பிக்கும் முறையை எளிமைபடுத்த வேண்டும்.

சிறுபான்மையர் தலங்களுக்கு மின் கட்டணம் குறைவாகவும், கிராம கோவிலுக்கு அதிகமாகவும் உள்ளது. தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்தும், பல கிராம கோவில்களில் ஒரு விளக்கு கூட எரிய வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

பூஜாரிகள் மாத ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உள்ளது. ஆனால் வருவாய் ஆய்வாளர்கள் சான்று தருவது இல்லை. எனவே வறுமையில் வாடும் வயது மூத்த பூஜாரிகளுக்கு ஓய்வு ஏதும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆண்டு வருவாய் உச்ச வரம்பை ரூ. 1 லட்சமாக உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற கோரி மார்ச் 13ல் அனைத்து மாவட்ட தலைநகரத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடக்க உள்ளது, என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

ram - mayiladuthurai,இந்தியா
30-ஜன-202315:02:13 IST Report Abuse
ram இப்பதான் ஒரு முன்னாள் மத்திய இந்நாள் திருச்சபை முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர், கோவில்களை நான் தான் இடித்தேன் என்று சொல்லுகிறான், இப்போது இந்த கோரிக்கைகளை கொண்டு சென்றால், அவர்கள் இருக்கும் கோவில்களை இடித்து விடுவார்கள், கோவில் இருந்தால்தானே ஊதியம், ஜாக்கிரதை.
Rate this:
Cancel
30-ஜன-202314:47:07 IST Report Abuse
மதுமிதா பூ ஜாரிகளிகளுக்குவருமானம் மகழ்ச அதை தரக்கூட சிலை உடைப்பு கண்ணியவான்பாலுவவிடமும் திக குழுவினரிடமும் அனுமதி தேவை இல்லை
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202313:56:58 IST Report Abuse
vpurushothaman பாபுஜி கொஞ்சம் பார்வையைப் பதிவு செய்யுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X