கோரக்நாத் கோயில் தாக்குதல்: குற்றவாளிக்கு மரண தண்டனை

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
லக்னோ: கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடைபெற்றது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது.




latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடைபெற்றது. அப்போது ஆயுதங்களுடன் நுழைந்த ஒருவர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். அவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.


கைது செய்யப்பட்ட முர்டாசா அப்பாஸாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அரிவாளுடன் வந்த அவர், போலீசாரை தாக்கி துப்பாக்கியை கைப்பற்ற திட்டமிட்டுஇருந்ததும், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவரது 'மொபைல் போன், லேப்டாப்' உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையோருக்கு 8.5 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.



latest tamil news



மரண தண்டனை:


ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இவர் நீண்ட காலம் தொடர்பில் இருந்தும் தெரிய வந்தது. இந்நிலையில் குற்றவாளி முர்டாசா அப்பாஸிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

S.kausalya - Chennai,இந்தியா
31-ஜன-202306:23:29 IST Report Abuse
S.kausalya அங்கு கோயிலுக்கு பங்கம் செய்தால் மரண தண்டனை. ஆனால் இங்கு ஒரு MP தைரியமாக கோயிலை, கடவுளை பங்கம் செய்தேன் என பெருமையாக சொல்லி கொண்டு உள்ளார். அவருக்கு இந்த மானம் கெட்ட இந்துக்கள் ₹2000 வாங்கி கொண்டு மறுபடியும் MP ஆக்குவார்கள். Andha mirugam செய்த செயலுக்கு பரிசு என்பது போல் அவர்களும் மீண்டும் இதே போல் மறுபடியும் இன்னும் சில கோயில்களை அழிப்பார்கள். சுய ninaivatra, காசுக்காக எதையும் விற்க வேண்டும் துணியும் இந்த வீர தமிழர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கொண்டாட்டம் தான். இப்படியே போனால் அதிக கோயிலை சிதைத்தவர்களுக்கு விருது கூட நம் வரி பணத்தில், கொடுப்பார்கள்
Rate this:
Cancel
s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-202305:03:34 IST Report Abuse
s. mohan இந்த மாதிரியான மிருக ஜென்மங்களை விட்டுவைக்க கூடாது. தூக்குதண்டனை மட்டுமே இதற்கு முடிவல்ல,
Rate this:
Cancel
30-ஜன-202320:21:45 IST Report Abuse
பேசும் தமிழன் உபி யில்....கோவிலில் தாக்குதல் நடத்திய ஆளுக்கு தூக்கு தண்டனை....ஆனால் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்திய ஆட்கள் விடுதலை ....இது தான் திராவிட மாடல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X