ராமேஸ்வரம் : வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுப்பெற்றுது. இதனால் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் லேசான மழை பெய்தது.
இதனை தொடர்ந்து நேற்று பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ஏப்., 1 முதல் கனமழை, சூறாவளி காற்று வீசும் என்பதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறையினர் தடை விதித்தனர்.