''டாக்டர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாருங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''யாரை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''நாகை மாவட்டத்தையே ஆட்சி செய்யும் அதிகாரியை தான் சொல்றேன்... அதிகாரி தலைமையில நடக்கிற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துல, துறை ரீதியா டாக்டர்களிடம் விவாதிக்கிறப்ப, திடீர்னு ஒருமையில பேசுறதும் இல்லாம, அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துறாருங்க...
![]()
|
''அதோட, 'நான் நெனச்சா உன்னை கண்காணாத இடத்துக்கு மாத்திடுவேன்'னு மிரட்டுறதோட, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துறாராம்... இதனால, சில டாக்டர்கள் ஆய்வுக் கூட்டத்துல இருந்து பாதியில வெளிநடப்பு செஞ்சிருக்காங்க...
''முதல்வருக்கு நெருக்கமா இருக்கிற சுகாதார அமைச்சரை பத்தி, 'அவர் சென்ஸ் இல்லாம பேசுறார்'னு அவதுாறா பேசியிருக்கார்... இதனால, அதிகாரியை மாத்தக் கோரி போராட்டம் நடத்த, டாக்டர்கள் தயாராயிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.