தமிழகத்திற்கு நிலக்கரி சுரங்கம் கிடைக்குமா?

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : ஒடிசாவில், 50 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்திய ஏலத்தில், தமிழக மின் வாரியம் பங்கேற்றது.தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. அவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி
Odisha,coal mining,coal,Tamil Nadu, நிலக்கரி சுரங்கம், தமிழ்நாடு, ஒடிசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை : ஒடிசாவில், 50 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வதற்காக, மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்திய ஏலத்தில், தமிழக மின் வாரியம் பங்கேற்றது.

தமிழக மின் வாரியம், திருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது. அவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படும்.

ஒடிசா மாநிலம், ஆங்கூல் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி கிலோ நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் சுரங்கம் உள்ளது. இதனுடன் சேர்த்து நாடு முழுதும், 141 சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய நிலக்கரி அமைச்சகம் ஏலம் கோரியுள்ளது. அதில் பங்கேற்க, நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

மற்ற சுரங்கங்களை விட, தமிழகத்திற்கு அருகில் உள்ள சகிகோபால் சுரங்கத்தை ஏலம் எடுப்பதற்கான போட்டியில், தமிழக மின் வாரியமும் பங்கேற்றுள்ளது. அதேபோல் பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.


latest tamil news

அதிக விலை புள்ளி வழங்கும் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சகிகோபால் நிலக்கரி சுரங்கம், மின் வாரியத்திற்கு கிடைக்குமா என்பது அடுத்த மாதம் தெரியவரும்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒடிசாவில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி சுரங்கங்களில் இருந்து, ஏற்கனவே தமிழகத்திற்கு நிலக்கரி வருகிறது. 'எனவே, தால்சர் அருகில் உள்ள சகிகோபால் சுரங்கத்தை ஏலம் எடுக்கும் முயற்சி நடக்கிறது; இதனால், நிலக்கரி எடுத்து வரும் போக்குவரத்திற்கு அதிக செலவு ஏற்படாது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

31-ஜன-202308:18:45 IST Report Abuse
Gopalakrishnan S இல்லை, இல்லை ... எங்களுக்கு மத்திய அரசு தரும் நிலக்கரி வேண்டாம்.... எங்களுக்கு தனித்தமிழ் நாடுதான் வேண்டும் ... தமிழர்கள் வீரர்கள் .. ஒரிசா மீது படை எடுத்துச்சென்று நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்றி ஆள்வோம் .
Rate this:
Cancel
31-ஜன-202308:18:45 IST Report Abuse
Gopalakrishnan S இல்லை, இல்லை ... எங்களுக்கு மத்திய அரசு தரும் நிலக்கரி வேண்டாம்.... எங்களுக்கு தனித்தமிழ் நாடுதான் வேண்டும் ... தமிழர்கள் வீரர்கள் .. ஒரிசா மீது படை எடுத்துச்சென்று நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்றி ஆள்வோம் .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202308:11:45 IST Report Abuse
Kasimani Baskaran ஏற்கனவே கோடிக்கணக்கான டன் நிலக்கரியை காணவில்லை... அடுத்து நிலக்கரி சுரங்கத்தையே அபேஸ் செய்து விடுவார்கள்... எதற்கும் திராவிடர்களிடம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X