போலீசாரின் கண்ணியத்தை காக்க வேண்டும்: முதல்வருக்கு ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
திருப்பூர்: 'போலீசாரைக் களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்வோர் மீது முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில், ஆரணியில் அரசு, தனியார் நிலங்களை ஆக்கிரமித்த வி.சி., கட்சியினரை போலீசார் கைது
Hindu Munnani, Kadateswara Subramaniam, Police, Mk Stalin, Kadateswara

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: 'போலீசாரைக் களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்வோர் மீது முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில், ஆரணியில் அரசு, தனியார் நிலங்களை ஆக்கிரமித்த வி.சி., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் சென்ற வி.சி.க., மாவட்ட தலைவர், ஜாதிப் பெயரை சொல்லி, இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.


ஜாமினில் வெளியே வந்த அக்கட்சியினர், போலீசாரை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக சென்றதுடன், போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். போலீசாரில், யாராவது தவறு செய்தால், அவர்களை சுட்டிக்காட்டி கண்டிக்கலாம். ஒட்டுமொத்த போலீசாரையும் குறை கூறுவது முட்டாள்தனம்.


latest tamil news

போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர், போலீசாரின் கண்ணியத்தை காக்க முன்வர வேண்டும். போலீசாரை களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்பவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சிவகங்கையில் சட்ட விரோதமாக, ஈ.வெ.ரா., சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தாசில்தார், டி.எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பவர்களின் சட்ட விரோத செயலுக்கு, துணை போக, அரசு துறையை நிர்ப்பந்திப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஒவ்வொரு மாதமும் உயர் அதிகாரிகள், 'துறை மாற்றம்' என்ற பெயரில் அரசால் பந்தாடப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202317:33:39 IST Report Abuse
J.V. Iyer அருமை.. காவல்துறையை காக்க நாம் போராடவேண்டி இருக்கிறது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
31-ஜன-202313:42:43 IST Report Abuse
duruvasar தப்பான இடத்தில் தப்பாக வைக்கப்படும் கோரிக்கை
Rate this:
Cancel
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-202309:40:32 IST Report Abuse
nisar ahmad போலீசாரின் கண்ணியத்தை காப்பாற்றவேண்டுமென்பவர்கள் முதலில் எச் ராஜாவை கைது செய்ய போராட்டம் நடத்துவார்களா அதிமுக ஆட்சியில் போலீசாரை ஆல் போலிஸ் கரப்டட் லஞ்சம் வாங்குபவர்கள் நான் தருகிறேன் உங்களுக்கு லஞ்சம் என்றானே அப்போது மான்பு என்னானது.
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
31-ஜன-202314:04:47 IST Report Abuse
Suppanஜனாப் நிசார் ஹெச் ராஜா பேசியதில் என்ன தவறு எனபதைக் குறிப்பிடுவீர்களா? ஆ ராசா, பாலு, ஆர் எஸ் பாரதி போன்றவர்கள் மிகவும் அசிங்கமாக, அடாவடியாக பேசினார்கள். அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடுங்களேன்....
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
31-ஜன-202314:07:00 IST Report Abuse
Suppanஇந்த கண்ணியம் போன்ற வார்த்தைகளுக்கும் கழகத்தினருக்கும் வெகு தூரம். அந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை அண்ணாதுரை ஆரம்பித்துவிட்டு அவரே காற்றில் பறக்கவிட்டுவிட்டார். அதெல்லாம் பேச்சோடு சரி....
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
31-ஜன-202318:17:23 IST Report Abuse
Dharmavaanகொலை, போராட்டத்தில் ஈடுபடும் ஜிகாதிகளை சிறையில் அடைக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X