பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு வெற்றி: ஜனாதிபதி உரை முக்கிய அம்சங்கள்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) ஜனாதிபதி உரையுடன் துவங்கியது.இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:* நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள்
Budget Season, President Speech, Droupadi Murmu, Parliament, பார்லிமென்ட், ஜனாதிபதி உரை, திரவுபதி முர்மு, பயங்கரவாதம், முக்கிய அம்சங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) ஜனாதிபதி உரையுடன் துவங்கியது.

இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:


* நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.


* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.


* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.


* பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றுகிறது இந்த அரசு.


* விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

* மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


* நாட்டில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன. அந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.


* எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயக்கங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


* அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது.


* பயமற்ற ஆக்கப்பூர்வமான அரசு மத்தியில் உள்ளது.


latest tamil news

* இந்திய இளைஞர்கள் எப்போதும் 2 அடி முன்னே உள்ளனர்.


* ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாறும்.


* நேர்மையுடனும், வெளிப்படையாகவும் இந்த அரசு செயல்படுகிறது.


* தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை பல வகைகளில் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.


* அரசியல் நிலைத்தன்மையில் மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது.


* ஏழைகளின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதே இந்த அரசின் இலக்கு.


* ஓபிசி, எஸ்சி, எஸ்டி., வகுப்பினரின் கனவுகளை நனவாக்க அரசு முயற்சிக்கிறது.


* இந்த அரசு தற்சார்பு நாடாக இந்தியாவை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.


* ஜம்மு-காஷ்மீரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்னைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.


* ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


பயங்கரவாதம் ஒழிப்பு


* பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.


* நாட்டு மக்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடுமின்றி மத்திய அரசு பணியாற்றி வருகிறது.


* நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அந்தமான் தீவுகளுக்கு சூட்டப்பட்டன.


* உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன


* நாட்டில் இருந்த காலனிகால அடிமைத்தன அடையாளங்கள் மத்திய அரசால் அகற்றப்பட்டுவிட்டன.


* எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த வைப்ரன்ட் கிராமங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


* சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி நிதியுதவி செய்துள்ளது.


* விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.


* நாட்டின் ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.


* விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது.


latest tamil news



வளர்ச்சி, முன்னேற்றம், புரட்சி

* அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


* ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.


* உள்நாட்டிலேயே போர் விமானங்களை கட்டமைக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.


* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது இந்த அரசு.


* கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி கிடைத்திருப்பதாக உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.


* அதி வேகமான வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் விமானப்படை.


* பிராட்பேண்ட் சேவைத்துறையில் இந்தியா புதிய புரட்சி செய்துள்ளது.


* நாட்டின் மிகப்பெரிய ரயில்நிலையங்கள் நவீனத்துவம் பெறுகின்றன.


* நாட்டுக்கு இளைஞர்கள் சேவையாற்றும் வாய்ப்பை அளிக்க பாதுகாப்பு படையில் அக்னிவீர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.


* நாட்டில் ஜனநாயகம், சமூகநீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாக உள்ளது.


* ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.


* வெளிநாடு தப்பிச் சென்ற நிதி மோசடியாளர்களை நாட்டுக்கு திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


* 2070க்குள் மாசில்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


* லட்சியத்தை அடைய நாம் ஒன்றோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

31-ஜன-202322:08:35 IST Report Abuse
பாரதி அருமை. அத்தனையும் முத்துக்கள். நன்றி...
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
31-ஜன-202318:24:57 IST Report Abuse
Rafi குண்டுவெடித்தவர்களுக்கு பாதுகாப்பும், எம் பி பதவி வழங்கி கவுரவித்தவர்கள், கொலைகாரர்களை எப்படியெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்தார்கள் என்று உலகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிப்பார்கள் என்பது நகைப்பிற்குரியது. இல்லாத கம்பெனில் முதலீடு செய்ய அரசுத்துறையை வற்புறுத்தியவர்கள் ஊழலை ஒழிப்பார்களா?.....மேலும் பலர் நாட்டை விட்டு ஓட வழி ஏற்படுத்தி கொடுக்கவே வாய்ப்பு அதிகம் என கணிக்க முடிகின்றது.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜன-202317:21:08 IST Report Abuse
venugopal s இந்த பாராளுமன்ற பொய்களுக்கு அந்த தமிழக சட்டமன்ற பொய்கள் எவ்வளவோ பரவாயில்லை!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X