கோவை: தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க, தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி: குட்கா தடை நீக்கம் குறித்த நீதிமன்ற தீர்ப்பை எதிரித்து மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட ஆலோசனை நடக்கிறது. தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க, தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.