தாலி கட்டாம ஒப்புக்கோ... பிள்ளையை பெத்துக்கோ..!: சீனாவில் ‛அதிரடி ஆபர்'

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
பெய்ஜிங்: சீனாவில் சமீப காலமாக, மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு ஆபராக அமைந்து, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள் தொகை: கடந்த, 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெய்ஜிங்: சீனாவில் சமீப காலமாக, மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு ஆபராக அமைந்து, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




latest tamil news



மக்கள் தொகை:


கடந்த, 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை கடுமையாக குறைந்துள்ளது. இதனால், உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடு என்ற அந்தஸ்தை சீனா, இந்தாண்டு இந்தியாவிடம் இழக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகை, 141 கோடியாக உள்ளது.


இது, 2021 இறுதியில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையை விட, 8.50 லட்சம் குறைவாக உள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 1.1 கோடி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1950க்கு பின் குழந்தை பிறப்பு விகிதம் முதல்முறையாக குறைந்துள்ளது.


இறப்பு விகிதமும், வழக்கத்தை விட கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய புள்ளியியல் முகமை அறிக்கை வெளியிட்டது.



latest tamil news


இந்நிலையில், திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு பிறந்த குழந்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும் சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாண அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.



ஏற்கனவே அமலிலிருந்த ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டது என்பதும் ஒரு தம்பதியினர் அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள நாடு அனுமதி வழங்கி உள்ளது. இது சிச்சுவான் மக்களுக்கு ஆபராக அமைந்து, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

sankar - chennai,இந்தியா
31-ஜன-202319:38:43 IST Report Abuse
sankar எப்படியோ இந்த விஷயத்திலே நாம ஜெயிப்போம் சீனாவை ரொம்ப பின்னுக்கு தள்ளுவோம் ஜெய் ஹிந்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-ஜன-202317:48:03 IST Report Abuse
NicoleThomson தைவானை சீனாவாக காட்டியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
31-ஜன-202317:43:48 IST Report Abuse
DVRR அது மட்டும் இல்லே இதுவும் உண்டு இன்றைய செய்தி சீனாவிலோ, குறுகிய காலத்தில், குறைந்த விலையில் நோயாளிகள் உறுப்புகளை பெற்று விடுகின்றனர் பலூன் கேங் உறுப்பினர்கள் 1980-ம் ஆண்டு வரை, புதிதாக சிறைக்கு வரும் கைதிகளிடம் ஒப்புதலுடன் உறுப்புகள் பெறும் நடைமுறை இருந்து வந்தது. சீன அதிபரான ஜியாங் ஜெமின் என்பவர் 20 லட்சம் பலூன் கேங் என்ற அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிறை பிடித்த உத்தரவிட்டார். 20 லட்சம் பலூன் கேங் கைதிகளின் மருத்துவ வரலாறு மற்றும் ரத்த மாதிரி வகைகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதன்பின் உறுப்பு மாற்று சிகிச்சை வசதிக்கான மருத்துவமனைகளின் பயன்பாடு பற்றிய தேசிய அளவிலான தகவல் தயாரிக்கப்பட்டது . மனித உறுப்புகள் எப்படி கிடைக்கின்றன என்பது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அவற்றை அரசு தவிர்த்து வருகிறது. சீனாவில் உய்குர் முஸ்லிம்களை சிறைபிடித்து வைத்திருக்கும் முகாம்கள் அருகே புதிதாக 9 தகன மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. உறுப்புகளை பிரித்து எடுத்த பின்னர், உடல்களை எரித்து விடுவார்கள் உள்ளார். பணக்கார நாடுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல் என்ற அந்த அறிக்கையில், கட்மேன் கூறும்போது, 2002-ம் ஆண்டு வரை ஒரு பொது நடைமுறை காணப்பட்டது. அதன்படி, ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகளை சேர்ந்த நோயாளிகள் ஷாங்காய் நகருக்கு விமானத்தில் பறந்து சென்று, 4 மணிநேரத்தில் புதிதாக கல்லீரல் பெற்று விடுவார்கள். முகாம்களில் உள்ள நபர்களிடம் இருந்து, தகவல் தொகுப்பில் பெறப்பட்ட தரவுகளை கொண்டு ரத்த மாதிரி அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். அதன்பின் உறுப்பு அறுவடை நடக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X