விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: சங்கர் மிஸ்ராவுக்கு கோர்ட் ஜாமின்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி:விமான பயணத்தின் போது, 72 வயது பெண் மீது குடி போதையில் சிறுநீர் கழித்த வழக்கில் கைதாகியுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு' கோர்ட் ஜாமின் வழங்கியது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, புதுடில்லி நோக்கி கடந்த ஆண்டு நவ., 26ல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்பவர் பயணித்தார்.அவர், விமானத்தில் மது அருந்தி போதையில், உடன் பயணித்த 72 வயது பெண் மீது
Flight urinating case: Court bails Shankar Mishra  விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: சங்கர் மிஸ்ராவுக்கு கோர்ட் ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:விமான பயணத்தின் போது, 72 வயது பெண் மீது குடி போதையில் சிறுநீர் கழித்த வழக்கில் கைதாகியுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு' கோர்ட் ஜாமின் வழங்கியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, புதுடில்லி நோக்கி கடந்த ஆண்டு நவ., 26ல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்பவர் பயணித்தார்.

அவர், விமானத்தில் மது அருந்தி போதையில், உடன் பயணித்த 72 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார். சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு பின், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.


latest tamil news

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் வைரலானதையடுத்து சங்கர் மிஸ்ராவை புதுடில்லி போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 'ஜாமின்' மனு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஹர்ஜோத் சிங் பஹல்லா, ரூ. 1 லட்சம் பிணை வைப்பு செலுத்த உத்தரவிட்டு, ஜாமின் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Fastrack - Redmond,இந்தியா
01-பிப்-202305:43:18 IST Report Abuse
Fastrack பொது இடங்களில் டயப்பர் கட்டிக்கொண்டு தான் போகணும்னு கண்டிஷன் போடலையா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-பிப்-202304:52:03 IST Report Abuse
J.V. Iyer நீதிமன்றத்தியிலும் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்காக ஜாமீன் என்று பொருள் கொள்ளலாம்.
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
01-பிப்-202300:17:26 IST Report Abuse
Jaykumar Dharmarajan அவர் மது போதையில் இருந்தார் என்றதைத் தவிர அனைத்து விஷயங்களும் சந்தேகப் படும்படி உள்ளன. கண்ணால் கண்ட சாட்சி இல்லை. ஒரு மாதம் கழித்து அந்த மூதாட்டி புகார் அளித்துள்ளார். அவர் சிறுநீர் முழுவதும் கழித்து முடிக்கும் வரை ஏன் அந்த மூதாட்டி ஆட்சேபிக்கவில்லை, சகபயணிகள் ஏன் சாட்சி சொல்லவோ, அந்த நபரைத் தடுத்து நிறுத்தவோ முயற்சி செய்யவில்லை, ஏன் அந்த மூதாட்டிக்கு இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்து உடனே கழிவரைக்கு செல்ல முடியாத நிலையில் தானே சிறுநீர் கழித்திருக்கக் கூடாது. முதியவர்களுக்கே வரும் ப்ரொஸ்ட்ரேட் என்லார்ஜ்மெண்ட் என்ற சிறுநீர்ப் பையை ஒரு சதை அழுத்தும் நோய் இருந்திருக்கக் கூடாது ஏன் அந்த ஆடையில் பட்ட சிறுநீர் யாருடையது என்று பரிசோதிக்கப் படவில்லை, இது போல் இன்னும் பல விஷயங்கள் புதிராகவே உள்ளது, அனைத்திற்கும் மேல் ஏன் அந்த ஏர்லைன்ஸ்- ஏர் இந்தியாவிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு செய்திருக்க கூடாது? ஏன் ஏன் ஏன்
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
01-பிப்-202307:00:08 IST Report Abuse
Ellammanஇதெயெல்லாம் சொல்லி பார்த்து கூட ஜாமீன் கிடைக்க்கவில்லை என்பதை மறக்காதீர். இப்படிப்பட்ட மட்ட ஜென்மங்களுக்கு இந்த தண்டனை ரொம்போ குறைவு....
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
01-பிப்-202308:25:39 IST Report Abuse
Dharmavaanசெய்தி வெளியிடும் ஊடகங்கள் விவரம் வெளியிடவில்லை....
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
01-பிப்-202308:51:56 IST Report Abuse
Ellammanபிரமாதமான முட்டு. எப்போவும் பிரச்சினையை திசை திருப்ப மிஸ்ராக்களுக்கு சொல்லி தரவா வேண்டும்? இருக்குற கோட சின்னதாக்கவேண்டுமெனில் பக்கத்துல ஒரு பெரிய கோட போட சாணக்கியர் சொல்லி கொடுத்ததை அட்சரம் பிசகாமல் செய்து பார்க்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X