124 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

Added : ஜன 31, 2023 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அருணாங்குளம், திரு.வி.க., நகர், மோச்சேரி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த, 124 குடும்பங்களின் வீடுகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன.இந்நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வாழ்வாதாரம் கருதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
 124 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அருணாங்குளம், திரு.வி.க., நகர், மோச்சேரி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த, 124 குடும்பங்களின் வீடுகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன.

இந்நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் மற்றும் வாழ்வாதாரம் கருதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

நேற்று, மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையில், 124 குடும்பங்களுக்கும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில், 12வது வார்டு நகரசபை உறுப்பினர் ஜெர்லின் ஜோஸ் மற்றும் பயனாளிகள் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X