தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கியதற்கு பாராட்டு
தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கியதற்கு பாராட்டு

தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கியதற்கு பாராட்டு

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த 2022 - 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வருவாய் ஆதாரங்களை பெருக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், சொத்து வரியை திருத்தி அமைத்தன. இதன் வாயிலாக மாநிலத்துக்கான
Appreciation for increasing the revenue sources of Tamil Nadu  தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கியதற்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த 2022 - 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வருவாய் ஆதாரங்களை பெருக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், சொத்து வரியை திருத்தி அமைத்தன. இதன் வாயிலாக மாநிலத்துக்கான வருவாய் உயர்ந்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகள், மின்சார கட்டணத்தை உயர்த்தின. இதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஆதாரம் கிடைத்து உள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களின் செலவீனம் அதிகரித்தது. இதனால் வருவாய் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில நிதியுதவிகளை செய்தாலும், இந்த மாநிலங்கள் தங்களுடைய வருவாய் ஆதாரங்களை உயர்த்தி கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news

உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களின் மதுபான கொள்கையை திருத்தின. லைசென்ஸ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், பரிசீலனை கட்டணம், பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டன. இதன் வாயிலாக கணிசமான வருவாய் மாநில அரசுக்கு கிடைத்தது.


இதைத் தவிர பல மாநிலங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கின. மேலும் சொத்துக்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதுவும் வருவாய் ஆதாரம் பெருகுவதற்கு மாநிலங்களுக்கு உதவின. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-202311:31:29 IST Report Abuse
venugopal s தமிழ்நாட்டில் சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை அதிகப் படுத்தியதற்கு மாநில அரசை மத்திய பாஜக நிதி மந்திரி பாராட்டுகிறார்.ஆனால் தமிழக பாஜக மாநில தலைவர்கள் அதையே எதிர்க்கின்றனர், இது இரட்டை நிலைப்பாடு இல்லையா?
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
01-பிப்-202308:30:50 IST Report Abuse
rajan உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களின் மதுபான கொள்கையை திருத்தின. லைசென்ஸ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம... உத்தர பிரதேசத்தில் மதுக்கடைகளை மூட அண்ணாமலை போராட்டம் நடத்தலாமே
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
01-பிப்-202307:48:53 IST Report Abuse
Dharmavaan இருக்கும் சொத்தை விற்று குடும்பம் நடத்துபவன் ஓட்டாண்டி ஆகப்போகிறான் என்று பொருள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X