பொறுப்பை விரும்புவோர் போட்டியிட தயங்குவதா?: பழனிசாமி விளாசல்

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
ஈரோடு: 'தேர்தல் பொறுப்பாளர், பகுதி பொறுப்பாளர் பதவியை விரும்புவோர், தேர்தலில் போட்டியிட தயங்குவது என்ன நியாயம்?' என, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கடிந்து கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நேற்று
admk, EPS, Palaniswami, Edappadi Palaniswami,ஈரோடு, இடைத்தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஈரோடு: 'தேர்தல் பொறுப்பாளர், பகுதி பொறுப்பாளர் பதவியை விரும்புவோர், தேர்தலில் போட்டியிட தயங்குவது என்ன நியாயம்?' என, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கடிந்து கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை, வில்லரசம்பட்டியில் நடந்தது.


கூட்டம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ஆரம்பத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி நிறுத்தப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. இதில், கள நிலவரத்தை கண்டு ராமலிங்கம், தென்னரசு தரப்பில் தயக்கம் காட்டினர். இதனால் நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, 'தேர்தலில் வேட்பாளராக நிற்க பலரும் முன்வருவதில்லை. பல காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒதுங்குகிறீர்கள். கடந்த, 2021 தேர்தலின் போது போட்டியிட எத்தனை பேர் விருப்ப மனு வழங்கினீர்கள்.


latest tamil news

'யார், யார் மூலம் சீட் பெற முயற்சி செய்தீர்கள் என தெரியும். அதே நேரம் இடைத்தேர்தலில் ஒதுங்குவது என்ன நியாயம்? தேர்தல் பணிக்குழு, பகுதி வாரியான குழுவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என கேட்டு பெறுவது என்ன நியாயம்?


'எந்த நிலையிலும் அ.தி.மு.க., தேர்தலை சந்திக்கும். எந்த நிர்வாகி பணி செய்யாவிட்டாலும், அவருக்கு மாற்றான நிர்வாகியை நியமித்து வேலையை செய்து முடிக்க இயலும். தேர்தலுக்கு பின் எந்தெந்த பகுதி, வார்டில் ஓட்டு குறைந்தது, கூடியது என பார்த்து, நல்ல முடிவுகள் எடுக்கப்படும்' என, காட்டமாக பேசினார். இதனால், ஈரோடு மாநகரத்தில் பல நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

THANGARAJ - CHENNAI,இந்தியா
01-பிப்-202314:34:46 IST Report Abuse
THANGARAJ ஒரு சாதாரண வட்ட செயலாளருக்கு (வண்டுமுருகன்) இடைத்தேர்தல் எம் எல் எ சீட் கொடுத்து அழகு பார்க்கலாமே? ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருக்கு அல்லவா?
Rate this:
Cancel
01-பிப்-202310:09:07 IST Report Abuse
மோகனசுந்தரம் இப்பொழுது ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. மரியாதையாக அந்த சீட்டை பாஜாவுக்கு ஒதுக்கி விட்டு விட்டால் உனக்கும் நல்லது உன்னுடைய கட்சிக்கும் நல்லது. ஆனால் ஒன்று உன்னுடைய ஆட்களிடம் கூறி முழு மனதுடன் ஒத்துழைக்க செய்ய வேண்டும். இல்லாமல் வீண்பிடிவாதம் பிடித்தால் நாளை ஒன்றும் இல்லாமல் போய் விடுவாய்.
Rate this:
Cancel
Honda -  ( Posted via: Dinamalar Android App )
01-பிப்-202309:25:04 IST Report Abuse
Honda அதிமுகவா எங்க இருக்குன்னு முழிக்கிறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X