'தேசிய கல்வி கொள்கை ஒன்றரை ஆண்டில் அமலாகும்!'

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : மத்திய உயர்கல்வி துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்ஜய்குமார் ஆகியோர் கூறியதாவது: 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.தேசிய கல்விக் கொள்கை, திறன் மேம்படுத்தும் பள்ளிக் கல்வியில் இருந்து துவங்குகிறது. பள்ளியில்
G20,National Education Policy, தேசிய கல்வி கொள்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை : மத்திய உயர்கல்வி துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்ஜய்குமார் ஆகியோர் கூறியதாவது: 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை, திறன் மேம்படுத்தும் பள்ளிக் கல்வியில் இருந்து துவங்குகிறது. பள்ளியில் இடைநிற்றலை குறைத்தல், பள்ளிக் கல்வி, தொழில்கல்வியை மேம்படுத்த, திறன் மேம்பாட்டு பயிற்சி தருதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசப்படும்.

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, கல்வி நிறுவனங்கள் செயல்படுவதுதான் வருங்கால தேவையாக இருக்கும். அனைத்து பிராந்திய மொழிகளிலும், மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும்.

வரும், 2025ம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம், 50 சதவீத பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அது, 2030க்குள், 100 சதவீதமாக வேண்டும். இது தான் தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்.


latest tamil news

தற்போதுள்ள, 10, +2 என்ற தேர்வு முறையை, 5+3+3+4 என மாற்ற உள்ளோம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரும்; அப்போது, இந்த தேர்வு முறை அமலாகும். இதற்காக, அனைத்து மாநில அரசுகளிடம் ஆலோசித்து வருகிறோம்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான, தமிழக அரசின், 'நான் முதல்வர் திட்டம்' சிறப்பாக செயல்படுகிறது. இது போன்று, மற்ற மாநிலங்களும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்த சந்திப்பின்போது, திறன் மேம்பாட்டு கல்வி செயலர் அதுல் குமார் திவாரி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் முன்னாள் தலைவர் அனில் சஹஸ்ரா புதே உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

01-பிப்-202320:53:18 IST Report Abuse
பாரதி தேசிய கல்விக் கொள்கைக் கல்வி சீக்கிரம் வரட்டும். நன்றிகள்...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
01-பிப்-202309:24:09 IST Report Abuse
raja ஒன்ற வருசத்துல இந்திய மாணவர்களுக்கு விடியல்... தமிழக மாணவர்களுக்கு விடியாத அரசால் மடியல் ....
Rate this:
Cancel
01-பிப்-202307:05:36 IST Report Abuse
அப்புசாமி பசங்க பாவம்.. 5-3-3-3-4 கல்வித்திட்டத்தின் மூலம் 3 வயதானவுடனேயே பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். பெற்றோர்களுக்கு, ஸ்கூல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஜாலி. பசம்க்க 17 வயதில் வெளியே வரும்போதே நோபல் பரிசு வாங்கிட்டு வந்துருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X