'ஈஸ்டர்' தின குண்டு வெடிப்பு: மன்னிப்பு கோரினார் 'மாஜி' அதிபர்

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கொழும்பு: இலங்கையில் 2019 'ஈஸ்டர்' தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்புக் கோரினார்.நம் அண்டை நாடான இலங்கையில் 2019, ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர்
Easter,Bomb Blast,Sri Lanka,Sirisena,Maithripala Sirisena,Former President

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கையில் 2019 'ஈஸ்டர்' தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்புக் கோரினார்.

நம் அண்டை நாடான இலங்கையில் 2019, ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும், அலட்சியமாக செயல்பட்ட அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


latest tamil news


அதிபர் சிறிசேனாவின் அலட்சியமே தாக்குதல்களுக்கு காரணம் என, வெடிகுண்டு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.

அப்போது, வெடிகுண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு 2.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, சிறிசேனாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்க தவறினால், நீதிமன்ற அவமதிப்பில் சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டது.


இந்நிலையில் 2019 ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கத்தோலிக்க கிறிஸ்துவ சமூகத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் அதிபர் சிறிசேன நேற்று தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

01-பிப்-202307:34:17 IST Report Abuse
ஆரூர் ரங் இறந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்.ஆனாலும் திராவிட நாட்டில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை.🤥😮‍💨 காரணம் குண்டு வைத்த கூட்டமும் தமிழ் மூர்க்கம்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
01-பிப்-202307:23:42 IST Report Abuse
Dharmavaan மன்னிப்பு உயிர்களை திரும்ப தந்து விடுமா
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
01-பிப்-202306:55:28 IST Report Abuse
Priyan Vadanad இப்போ தேசியம், தேசப்பற்று என்கிற போர்வையில் சுருட்டப்பட்ட அடடாநீ குண்டு வெடிச்சிருக்கே. அதுக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா? அதுக்கு பொதுமக்களின் வரிபணமருந்து பல பல ஆயிரம் கோடி தள்ளி கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றனவே. அதுக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா? ஒரு சின்ன சந்தேகம் அம்புடுதேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X