''கமிஷனுக்கு ஆசைப்பட்டு வாங்கினா இப்படித் தான் ஆகுமுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பாதுகாப்புக்காக, 180, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தினாங்க... இதுல, 80 சதவீத கேமராக்கள், 'டோட்டலா அவுட்' ஆகிடுச்சாம்... மீதி இருக்கிற கேமராவுல, உருவத்தோட, 'அவுட்லைன்' மட்டும் தான் தெரியுதுங்க... ஆணா, பெண்ணான்னு கூட கண்டுபிடிக்க முடியலங்க...
![]()
|
''எல்லாமே, 'கேரன்டி, வாரன்டி' இல்லாத, சைனா ஐட்டங்களாம்... கேமரா சரியா இல்லாததால, மருத்துவமனை வளாகத்துல நடக்கிற குற்ற செயல்களை கண்டுபிடிக்க முடியாம போலீசார் ரொம்பவே திணற வேண்டி இருக்குதுங்க... போன வருஷம் திருடு போன, 40 ஆயிரம்ரூபாய் மின் மோட்டாரை இன்னும் கண்டுபிடிக்க முடியலங்க...
''டாக்டர்களோட, 'லேப்டாப், ஐ போன்' நோயாளிகளின் நகை, மொபைல் போன்கள்அடிக்கடி திருடு போகுது... 'இந்த ஓட்டை கேமராக்களை மாத்தினா தான் இதுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்'னு மருத்துவமனை ஊழியர்கள் புலம்புறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெரியவர்கள் எழுந்தனர்.