ராமநாதபுரம்: புயல் எச்சரிக்கை காரணமாக வரும் 3ம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 - 65கி.மீ., வரை வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவானிலை மையம்தெரிவித்துள்ளது.
எனவே, தென் மேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா,கன்னியாகுமரி கடலில் வரும் 3 வரை கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என,எச்சரிக்கப்பட்டுள்ளது.