கொள்ளை அடிப்பதற்காக கோவில்களை இடித்தாரா? டி.ஆர்.பாலு மீது போலீசில் பெண் வழக்கறிஞர் புகார்!

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (34) | |
Advertisement
'மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என, மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தி.மு.க., -- எம்.பி., டி.ஆர்.பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், சைதாப்பேட்டை வழக்கறிஞர் ராஜாத்தி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய தஞ்சாவூர் மாவட்டம்,
TR Balu, Kovil demolish, Woman Advocate,டிஆர் பாலு, கோவில்கள், பெண் வழக்கறிஞர், போலீஸ், திமுக,Police, DMK,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

'மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என, மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தி.மு.க., -- எம்.பி., டி.ஆர்.பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், சைதாப்பேட்டை வழக்கறிஞர் ராஜாத்தி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய தஞ்சாவூர் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு சொந்தமாக, திருமங்கலக்குடி சிவன் கோவில் உள்ளது. 1968ல் தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததும், இந்த கோவில் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். கோவிலுக்குச் சொந்தமான, 20 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, அதை வீட்டு மனைகளாக மாற்றி, பலருக்கும் விற்பனை செய்தனர். இதை எதிர்த்து, அதீன மடத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.



குற்றச்சாட்டு


ஆனாலும், அதிகாரத்தை பயன்படுத்தி, கோர்ட் உத்தரவை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். இன்றளவிலும், குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டி பலரும் இருந்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஹிந்து கோவில் நிலத்துக்குச் சொந்தமான அந்த கிராம நிலங்களையும் கையகப்படுத்தினார்.



கடந்த 1980ல், திருச்செந்துார் முருகன் கோவிலில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். அதற்கு காரணம், தி.மு.க.,தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தணிக்கை ஆய்வாளராக இருந்த வெங்கடாசலம் என்பவர், 1983ல் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மர்ம மரணத்துக்கு பின்னணியிலும், தி.மு.க.,வினர் இருப்பதாக கூறப்பட்டது.


latest tamil news


பெரும் அதிருப்தி


இப்படி பல விஷயங்களை ஆதாரங்களுடன் கூறலாம். அதாவது, ஹிந்து கோவில் நிலங்களை அபகரிப்பது, கோவில் சொத்துக்கள் மீது ஆசைப்படுவது, கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது என தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுக்க புகார்கள் உள்ளன. இதனால், ஹிந்து மக்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்நிலையில்தான், 'நுாறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, வெளிப்படையாகவும், ஆணவத்தோடும், டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.


வணங்குவதற்குரிய இடங்களான கோவில்களை பாதுகாக்கும் சட்டம் 1991ல், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, நாட்டு சுதந்திரத்துக்கு முன்னதாக கட்டப்பட்ட எந்த கோவிலையும் இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது.



நடவடிக்கை


'நுாறு ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, டி.ஆர்.பாலு பேசியிருப்பது, குறிப்பிட்ட சட்டத்துக்கு எதிரானது. எனவேதான், டி.ஆர்.பாலு மீது வழக்கு போட்டு, அவரை கைது செய்ய வேண்டும் என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளேன். ஹிந்து கோவில்களை இடித்துள்ளதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், அக்கோவில்களில் இருந்த நகை மற்றும் பொருட்கள் எங்கே? அவற்றை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கோவில்களை இடித்துள்ளார் என சந்தேகப்படுகிறேன்.



பார்லிமென்ட் உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளது. அந்த குழுவிலும், டி.ஆர். பாலு மீது புகார் அளிக்க உள்ளேன். டி.ஆர்.பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராஜாத்தி கூறினார்.


-- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

M Ramachandran - Chennai,இந்தியா
01-பிப்-202320:39:07 IST Report Abuse
M  Ramachandran நாத்தம் பிடித்த கும்பல் அதன் வேலையய் செய்கிறது . மற்ற கோயில்களை கோவில் நிலங்களை இந்த கயமை கும்பல்களிடமிருந்துடமிருந்து தமிழ்நாட்டையும் காக்க வேண்டியது நீதி மன்றங்களின் தலையாய கடமை. ஏன் மத்திய அரசு நிலங்கலிய்ய ரயில்வே நிலங்களையும் பட்டா போட்டு கபளீகரம் செய்ய வேண்டியது தானே. அது புதிது அல்ல. தாம்பரம் ஐ ஏ எப் நிலத்தை ஆட்டை போட்டு விட்டார்கள் . தற்சமயம் நிலத்தை கேட்கிறார்கள் . அதற்கு தமிழக அரசிடமிருந்து இது வரை பதில் இல்லை. ஜெகஜால கில்லாடிகள் எமகாதகர்கள் . கடலிலே பாட்டா போட்டு மத்திய அரசு நிறுவனத்திற்கு விற்றவர்கள் ஆயிற்றே. ஐலண்ட் கிரௌன்டையே ஆட்டை போட பார்த்தார்கள் ராணுவம் முழித்து கொண்டு விட்டது .
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
01-பிப்-202318:46:39 IST Report Abuse
muthu In foreign countries, the church obstruction during road construction were removed by shifting the church to other places
Rate this:
Cancel
veerai - chennai,இந்தியா
01-பிப்-202318:00:42 IST Report Abuse
veerai ஒரு சில ரோசக்கார இந்துக்களின் குமுறல் மட்டும் கேட்க்கிறது ஆனால் பல மசூதிகளையும் தேவ ஆலயங்களையும் மக்களின் நன்மைக்காக இடித்தேன் எனவும் கூறினார். பாபர் மசூதியை இழந்த மண்ணாங்கட்டிகளுக்கு மட்டும் ஏனோ ரோசம் வரவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X