திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, மாறன்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வம் மனைவி சுந்தரி,45. இவர், நேற்று முன்தினம், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தார்.
பின், மலைக்கோவிலில் உள்ள ஆர்.சி.மண்டபத்தில் இரவு தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில், சுந்தரி எழுந்து வீட்டிற்கு செல்வதற்கு புறப்பட்ட போது, திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கு இருந்த சக பக்தர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.