தந்தி மாரியம்மன் கோவில் 5ல் மகா கும்பாபிஷேம்

Added : பிப் 01, 2023 | |
Advertisement
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 5ம் தேதி நடக்கிறது.குன்னுாரில், 75 ஆண்டுகளாக உள்ள தந்தி மாரியம்மன் கோவில், ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்களின் உதவியுடன் கோவில் செப்பனிடப்பட்டது.நாளை காலை, 8:30 மணிக்கு மகாகணபதி பூஜை, ஹோமங்களுடன் விழா துவங்குகிறது. மதியம், 2:30 மணிக்கு கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து முளை பாலிகை, தீர்த்த



குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 5ம் தேதி நடக்கிறது.

குன்னுாரில், 75 ஆண்டுகளாக உள்ள தந்தி மாரியம்மன் கோவில், ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்களின் உதவியுடன் கோவில் செப்பனிடப்பட்டது.

நாளை காலை, 8:30 மணிக்கு மகாகணபதி பூஜை, ஹோமங்களுடன் விழா துவங்குகிறது. மதியம், 2:30 மணிக்கு கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து முளை பாலிகை, தீர்த்த குடம், மேள தாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு வந்தடைகிறது.

4ம் தேதி காலை, 8:00 மணிக்கு வி.பி., தெரு சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் யாகசாலையை அடைந்து 'இரண்டாம் யாக வேள்வி பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 7:30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடக்கின்றன.

5ம் தேதி காலை, 6:00 மணிக்கு 4ம் கால வேள்வி, 9:20 மணியில் இருந்து 10:20 மணிக்குள், யாத்ரா தான சங்கல்பம், விமானம் மற்றும் கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேம் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X