பொங்கல் பரிசு பணம் திருடியவருக்கு 'காப்பு'

Added : பிப் 01, 2023 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு களத்துமேட்டு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரகாஷ், 37; ரேஷன் கடை விற்பனையாளர். இவர், திருப்போரூர், கரும்பாக்கம் அடுத்த விரால்பாக்கம் பகுதி ரேஷன் கடையில், வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் டீக்கடைக்கு செல்வதற்கு, இருசக்கர வாகனத்தின் மேல், 'பேக்'கை வைத்துவிட்டு சென்றார்.அதன்பின், திரும்பி வந்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டு களத்துமேட்டு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரகாஷ், 37; ரேஷன் கடை விற்பனையாளர். இவர், திருப்போரூர், கரும்பாக்கம் அடுத்த விரால்பாக்கம் பகுதி ரேஷன் கடையில், வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள தனியார் டீக்கடைக்கு செல்வதற்கு, இருசக்கர வாகனத்தின் மேல், 'பேக்'கை வைத்துவிட்டு சென்றார்.

அதன்பின், திரும்பி வந்து பார்த்தபோது, பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில், பொங்கல் பரிசு தொகை 27 ஆயிரம் ரூபாயும், கடையில் விற்பனை செய்த, 18 ஆயிரத்து 950 ரூபாயும், இரண்டு கைரேகை வைக்கும் 'மிஷின்'களும் இருந்தன. அவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கணேஷ், 40, என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து, 11 ஆயிரம் ரூபாயையும், இரண்டு கைரேகை வைக்கும் மிஷின்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில், நேற்று போலீசார் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X