கஞ்சா பறிமுதல்; மாணவர் உட்பட இருவர் கைது

Added : பிப் 02, 2023 | |
Advertisement
மதுக்கரை : மதுக்கரை மரப்பாலம், ராஜேஸ்வரி நகர் பிரிவு அருகேயுள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக, மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,குப்புராஜ் தலைமையிலான தனிப்படையினர் அக்குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றனர்.வீட்டிலிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பரமக்குடியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 23, சுண்டக்காமுத்தூர், வயல் தோட்டத்தை சேர்ந்த



மதுக்கரை : மதுக்கரை மரப்பாலம், ராஜேஸ்வரி நகர் பிரிவு அருகேயுள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக, மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,குப்புராஜ் தலைமையிலான தனிப்படையினர் அக்குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிலிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பரமக்குடியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 23, சுண்டக்காமுத்தூர், வயல் தோட்டத்தை சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவர் பூலேந்தன், 22 என தெரிந்தது.அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

எஸ்.ஐ., செந்தில்குமார் புகாரில், மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய பெருமாநல்லூரை சேர்ந்த ஆரோன் என்பவரை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X