''பதவி ஆசை காட்டி, வசூலை குவிச்சுண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே, நாயர் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டார், குப்பண்ணா.
''ஆளுங்கட்சியிலயா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஆமா... தி.மு.க.,வின் தொழிற்சங்கமான, தொ.மு.ச., இருக்கோல்லியோ... இதன் ஒரு அங்கமான, தொழிலாளர் அணியின் மாநில நிர்வாகி மீது தான் வசூல் புகார்கள் வர்ரது ஓய்...
''அதாவது, தொழிலாளர் அணிக்கு மாவட்ட வாரியா துணை, இணைன்னு பல பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கப்போறதா சொல்லி, வசூலை குவிச்சுண்டு இருக்கார்... இதுக்கு, கட்சி தலைமையிடம் அனுமதி வாங்கலை...
![]()
|
''இதுல வேடிக்கை என்னன்னா, தொழிலாளர்அணிக்கு மாவட்ட அளவுல நிர்வாகிகளை, இதுவரை நியமிச்சதே இல்லையாம்... மாநில நிர்வாகியின் இந்த அதிகப்பிரசங்கி செயலால, கடுப்பான சில தொழிற்சங்க நிர்வாகிகள், தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செல்வராஜ் இங்கன உட்காரும்...'' என நிறுத்தினார் அண்ணாச்சி.