காட்டெருமை மோதி விவசாயி பலி

Added : பிப் 02, 2023 | |
Advertisement
திருச்சி,:துவரங்குறிச்சி அருகே, காட்டெருமை முட்டியதில், பைக்கில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே, தெத்துார் மலையாண்டி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சிவஞானம், 46. விவசாயியான அவர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.தெத்துார் - மருதம்பட்டி சாலையில், நர்சரி கார்டன் அருகே சென்ற

திருச்சி,:துவரங்குறிச்சி அருகே, காட்டெருமை முட்டியதில், பைக்கில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே, தெத்துார் மலையாண்டி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சிவஞானம், 46. விவசாயியான அவர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தெத்துார் - மருதம்பட்டி சாலையில், நர்சரி கார்டன் அருகே சென்ற போது, சாலையில், காட்டெருமைகள் சென்றன.

இதனால் பைக்கை ஓரமாக நிறுத்த முயன்ற சிவஞானத்தை, காட்டெருமை ஒன்று மார்பில் முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X